2029 மக்களவைத் தேர்தல்.. இப்போதே வியூகம் வகுக்கும் காங்கிரஸ்.. ராகுல் போடும் ஸ்கெட்ச்!

May 29, 2026,06:11 PM IST

பெங்களூர்: கர்நாடகாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் திட்டமிடப்பட்டு வந்த முதலமைச்சர் பதவி மாற்றம் தற்பொழுது இறுதிப் புள்ளியை எட்டியுள்ளது. முதலமைச்சராக இருந்த சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்க உள்ளார். இந்த அதிகார மாற்றத்தை ராகுல் காந்தி முன்னின்று வெற்றிகரமாக முடித்து வைத்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


உண்மையில் 2029 மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு பல்வேறு காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளார் ராகுல் காந்தி. அதன் ஒரு பகுதிதான் கர்நாடகாவில் நடைபெறவுள்ள இந்த ஆட்சி மாற்றம்.


டெல்லியில் சித்தராமையாவுடன் ராகுல் காந்தி நடத்திய சுமார் 35 நிமிடத் தனிப்பட்ட பேச்சுவார்த்தையின் போது, சித்தராமையாவை ராஜினாமா செய்ய அவர் சம்மதிக்க வைத்துள்ளார். காங்கிரஸின் மிக முக்கிய ஓபிசி (OBC) முகங்களில் ஒருவரான சித்தராமையா, மாநில அரசியலைத் தாண்டி தேசிய அளவிலான அரசியலை உற்று நோக்க வேண்டும் என்றும், குறிப்பாக 2029 மக்களவைத் தேர்தலை மனதில் வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.




ஆரம்பத்தில் சித்தராமையா, தனது தலைமையின் கீழ் ஆட்சி தொடர்ந்தால் மட்டுமே அடுத்த தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருக்கும் என்றும், டி.கே.சிவக்குமார் 2028-ல் புதிய அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளலாம் என்றும் வாதிட்டார். இருப்பினும், ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக இருந்தார். ஏற்கனவே கேரள முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் நிலவிய முட்டுக்கட்டையை காங்கிரஸ் எவ்வாறு சாதுரியமாகக் கையாண்டதோ, அதே போன்றதொரு அரசியல் முதிர்ச்சியை இங்கும் ராகுல் காந்தி வெளிப்படுத்தியுள்ளார்.


கடந்த நான்கு தசாப்தங்களாக கர்நாடகாவில் எந்தவொரு ஆளுங்கட்சியும் அடுத்தடுத்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்ததில்லை. 2013 முதல் 2018 வரை முழுமையாக ஆட்சி செய்த போதிலும், அதற்கு அடுத்த தேர்தலில் சித்தராமையாவால் காங்கிரஸிற்கு பெரும்பான்மையைப் பெற்றுத் தர முடியவில்லை. எனவே, இந்த வரலாற்றை மாற்றி, வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றியை உறுதி செய்யவே இந்த புதிய வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.


கேரளாவில் ராகுல் விருப்பபடியே ஆட்சியமைந்துள்ளது. தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சியை வலுவான, செல்வாக்காக திகவும் விஜய்யுடன் கை கோர்க்க வைத்துள்ளார் ராகுல் காந்தி. கர்நாடகத்திலும் தனது திட்டப்படி ஆட்சி மாற்றத்தை அரங்கேற்றியுள்ளார். காங்கிரஸ் வகுத்து வரும் திட்டங்களை பாஜகவும் உற்று நோக்கி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் முறைகேடு...பகீர் கிளப்பிய எம்.பி. ஜோதிமணி

news

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்: தவெக.,க்கு கோர்ட் உத்தரவு

news

"தமிழ்நாடு தாங்காது CM Sir!".. முதல்வருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய உதயநிதி

news

அமைச்சரின் பி.ஏவிடம் ரூ.4000 லஞ்சம் கேட்டு தொக்காக மாட்டிக் கொண்ட திருச்செந்தூர் அர்ச்சகர்கள்

news

வைஷ்ணவதேவி கோவிலுக்குச் செல்லத் திட்டம்.. பலத்த இடியுடன் மழை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 11)

news

ஜூன் மாதத்தில் வெயில் கொளுத்தும்.. மழை குறையும்.. வானிலை மையம் அறிவிப்பு

news

Sound Body, Sound Mind.. ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்.. ஒழுக்கமான வாழ்க்கை முறையின் அவசியம்!

news

ராஜினாமா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சி.வி.சண்முகம்!

news

2029 மக்களவைத் தேர்தல்.. இப்போதே வியூகம் வகுக்கும் காங்கிரஸ்.. ராகுல் போடும் ஸ்கெட்ச்!

அதிகம் பார்க்கும் செய்திகள்