புதுச்சேரி: ஆப்ரேஷன் திரிசூலம் என்ற பெயரில் முக்கிய குற்றவாளிகள், ரவுடிகளின் வீடுகளில் இன்று அதிகாலை முதலே போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
சமீப காலமாகவே புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொலை, கொள்ளை, மிரட்டல், பழிவாங்கல் போன்ற குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதற்காக ரவுடிகள் ஆயுதங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதிகளில் ஆயுதங்களின் புழக்கங்கள் அதிகரித்துள்ளது. இதனையடுத்து ரவுடிகளின் ஆட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள முக்கிய குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளின் வீடுகளில் இன்று அதிகாலை முதலே போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ஆப்ரேஷன் திரிசூலம் என்ற பெயரில் இந்த சோதனையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
மேலும் ரவுடிகளின் வீடுகளில் ஆயுதம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் சோதனை நடத்தினர். இதில் சந்தேகத்தின் பேரில் 30 க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் இந்த அதிரடி சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...மாவட்ட வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம்
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக ஒழிக்கவே பெயர் மாற்றம் - திருமாவளவன்
செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
விஜய் தான் களத்தில் இல்லை.. திடீரென வருகிறார்.. திடீரென காணாமல் போகிறார்: தமிழிசை செளந்தரராஜன்
ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!
{{comments.comment}}