- அ.கோகிலா தேவி
சென்னை: இயற்கையின் ஒரு அற்புதம் மழை!
மழை என்று சொல்லும் போதே மனதிற்குள் எழும் ஒரு புது உற்சாகம், குதூகலம், ஆனந்தம் மற்றும் ஒரு பயம். மழை வெறும் நீர் துளி அல்ல பல நினைவுகளை நம்முன் கொண்டு வந்து இனிய சிலிர்ப்பை தர கூடியது.
கோடை வெயிலின் கதகதப்பில் வெந்து கொண்டிருக்கும் பூமி மீது முதல் மழைத்துளி விழும் போது எழும் அந்த மண் வாசனைக்கு நான் அடிமை.
மழை என்றாலே பள்ளி விடுமுறையை எதிர்பார்க்கும் மனம். அம்மா செய்து தரும் சூடான பஜ்ஜி, ஜன்னலோர சில் என்ற காற்று, மெய்சிலிர்க்கும் குளிர் .. நினைக்க நினைக்க ஆனந்தமே.

கனமழை பெய்து இடி மின்னலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் குடும்பத்துடன் சிரித்து பேசி, உண்டு மகிழ்ந்த நாட்கள் கண் முன்னே வருகின்றன.
ஒவ்வொரு மழைத்துளியும் ஒரு கதை சொல்கிறது. புதுபுது அனுபவங்களை நாம் என்றும் கொண்டாடுவோம்.
இன்று மழை என்றாலே பயம் என்றாகி விட்டது. வெள்ளம் வருமோ, வீடுகளில் புகுந்து விடுமோ.. என்ன செய்வது ஏது செய்வது என்ற அச்ச உணர்வுடன்தான் மழையை இன்று பலரும் பார்க்கிறார்கள். மழை வந்தால் ஜாலியாக ஆடிப் பாடி மகிழ்ந்த காலம் போய், இந்த மழையை எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்ற அச்ச உணர்வுதான் மேலோங்கி நிற்கிறது. காரணம், மழைக்கான இடத்தை நாம் ஆக்கிரமித்து வைத்திருப்பதால்.
மழைக்கும் இடம் தருவோம்.. மழையோடு நம் வாழ்க்கையையும் ஒருங்கிணைப்போம்.. ஆனந்தத்துடன் அதை வரவேற்போம்.. மழை நல்லது.. மண்ணுக்கு மட்டுமல்ல.. மனதுக்கும்.
(அ.கோகிலா தேவி, தென்தமிழ் செய்தி இணையதாளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}