- அ.கோகிலா தேவி
சென்னை: இயற்கையின் ஒரு அற்புதம் மழை!
மழை என்று சொல்லும் போதே மனதிற்குள் எழும் ஒரு புது உற்சாகம், குதூகலம், ஆனந்தம் மற்றும் ஒரு பயம். மழை வெறும் நீர் துளி அல்ல பல நினைவுகளை நம்முன் கொண்டு வந்து இனிய சிலிர்ப்பை தர கூடியது.
கோடை வெயிலின் கதகதப்பில் வெந்து கொண்டிருக்கும் பூமி மீது முதல் மழைத்துளி விழும் போது எழும் அந்த மண் வாசனைக்கு நான் அடிமை.
மழை என்றாலே பள்ளி விடுமுறையை எதிர்பார்க்கும் மனம். அம்மா செய்து தரும் சூடான பஜ்ஜி, ஜன்னலோர சில் என்ற காற்று, மெய்சிலிர்க்கும் குளிர் .. நினைக்க நினைக்க ஆனந்தமே.

கனமழை பெய்து இடி மின்னலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் குடும்பத்துடன் சிரித்து பேசி, உண்டு மகிழ்ந்த நாட்கள் கண் முன்னே வருகின்றன.
ஒவ்வொரு மழைத்துளியும் ஒரு கதை சொல்கிறது. புதுபுது அனுபவங்களை நாம் என்றும் கொண்டாடுவோம்.
இன்று மழை என்றாலே பயம் என்றாகி விட்டது. வெள்ளம் வருமோ, வீடுகளில் புகுந்து விடுமோ.. என்ன செய்வது ஏது செய்வது என்ற அச்ச உணர்வுடன்தான் மழையை இன்று பலரும் பார்க்கிறார்கள். மழை வந்தால் ஜாலியாக ஆடிப் பாடி மகிழ்ந்த காலம் போய், இந்த மழையை எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்ற அச்ச உணர்வுதான் மேலோங்கி நிற்கிறது. காரணம், மழைக்கான இடத்தை நாம் ஆக்கிரமித்து வைத்திருப்பதால்.
மழைக்கும் இடம் தருவோம்.. மழையோடு நம் வாழ்க்கையையும் ஒருங்கிணைப்போம்.. ஆனந்தத்துடன் அதை வரவேற்போம்.. மழை நல்லது.. மண்ணுக்கு மட்டுமல்ல.. மனதுக்கும்.
(அ.கோகிலா தேவி, தென்தமிழ் செய்தி இணையதாளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
நட்பு.. என்றும் நிலைத்து இருக்கும் வானம்!
எங்க ஊரு பாட்டு!
புத்தகம்.. அறிவு, ஒழுக்கம், சிந்தனை, கற்பனையை வளர்க்கும் சிறந்த கருவி!
World Book Day: புத்தகங்கள் அறிவை வளர்க்கட்டுமே, சுமையை அல்ல!
பரிகார பூசைக்கு எல்லாம் திருமுறைகளை பாடுபவர்கள் ஓதுவார்களே அல்ல - சிவ.ச.நடராஜதேசிகர்
செக்கர் வானம் (செவ்வானம்)
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
ஜனநாயகக் கடமையாற்ற வேண்டிய நாள்.. உங்கள் வாக்கை தவறாமல் பதிவு செய்யுங்கள்!
{{comments.comment}}