சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடைகாலம் துவங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் கன முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பத்து வருடத்திற்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இதில் பள்ளிக்கரணை நாராயணபுரம், வளசரவாக்கம், சாலிகிராமம், மடிப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவானது.
இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டது. அதேபோல் ஆவடி, மதுரவாயில், பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் வெக்கை தணிந்து குளுமையான சூழல் நிலவி வந்தது.

இந்த நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை மழை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}