குடையை மறந்துடாதீங்க.. தமிழ்நாட்டில்.. இன்றும் மழை தொடருமாம்.. வானிலை ஆய்வு மையம்!

Jul 11, 2024,06:54 PM IST

சென்னை: மேற்கு திசை காற்றின்  மேக வேறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேற்கு திசை காற்றின் வேக வேறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில், கடந்த ஒரு வாரமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இப்பகுதிகளில் பகலில் வெயில் அதிகமாக காணப்பட்டாலும் மாலை நேரங்களில் நல்ல மழை பொழிந்து முழுமையான சூழல் நிலவு வருகிறது. 




அந்த வகையில் நேற்று இரவுக்கு மேல் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இந்த தொடர் மழை காரணமாக சென்னை புழல் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இது தவிர சென்னையில் உள்ள குடிநீர் ஏரிகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது மழை பெரிதாக இல்லாவிட்டாலும் கூட மேக மூட்டமாக இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் மழை முட்டிக் கொண்டு வரும்போல உள்ளது.


இந்த நிலையில் இன்னும் சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை தொடரும். குறிப்பாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


இன்று மழை: 


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை நீடிக்கும் எனவும் அறிவித்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் பொன்னேரியில் சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. செங்குன்றம், ஆவடி, ராணிப்பேட்டை, புழலில் தலா 7 செமீ மழையும்,சோழவரம், தாமரைப்பாக்கத்தில் தலா 5 சென்டிமீட்டர் மழையும், பூண்டி ஊத்துக்கொட்டையில் தலா 3 செமீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல் பூவிருந்தவல்லி, திருவள்ளூர், திருவாலங்காடு, பள்ளிப்பட்டியில் தலா 2 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்