தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னையில்.. இன்றும் டமால் டுமீல்தான்!

Aug 06, 2024,06:27 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்கள் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


சென்னையில் இன்றும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம்:




கடந்த சில நாட்களாகவே மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலேயே பரவலாக கனமழை பெய்து வந்தது. தற்போது தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தற்போது இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாகவே சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இந்த நிலையில் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோரப் பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய கூடும் எனவும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இன்று கனமழை: 


காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.


நாளை கனமழை: 


அதேபோல் நாளை வட கடலோர மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஆகிய ஒன்பது மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னையில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை:


இதற்கிடையே, எதிர் வரும் வட கிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஏரியில் ஆகாயத் தாமரை அகற்றும் பணியில் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னதாகவே சென்னை முழுவதும் உள்ள நீர் நிலைகளையும் தூர்வாரி தயார் நிலையில் வைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. 


இதன் அடிப்படையில் தற்போது முதற்கட்டமாக பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரியில் கனரக இயந்திரம் கொண்டு சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. மாநகராட்சி பகுதிகள் அனைத்திலும் இந்தப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்