சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்கள் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்றும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம்:

கடந்த சில நாட்களாகவே மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலேயே பரவலாக கனமழை பெய்து வந்தது. தற்போது தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தற்போது இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாகவே சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோரப் பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று கனமழை:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை கனமழை:
அதேபோல் நாளை வட கடலோர மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஆகிய ஒன்பது மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
இதற்கிடையே, எதிர் வரும் வட கிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஏரியில் ஆகாயத் தாமரை அகற்றும் பணியில் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னதாகவே சென்னை முழுவதும் உள்ள நீர் நிலைகளையும் தூர்வாரி தயார் நிலையில் வைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் தற்போது முதற்கட்டமாக பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரியில் கனரக இயந்திரம் கொண்டு சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. மாநகராட்சி பகுதிகள் அனைத்திலும் இந்தப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்
சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்
முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா
மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து
Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!
தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது
{{comments.comment}}