Rain: தமிழ்நாட்டில்.. ஜூன் 2ஆம் தேதியும் கனமழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு!

May 29, 2024,06:16 PM IST

சென்னை:  கேரளாவில் தென்மேற்குப் பருவமழை இரண்டு, மூன்று தினங்களில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஜூன் இரண்டாம் தேதி ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


கேரளாவில் இன்றும் நாளையும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல், நிக்கோபார் தீவுகளில் கடந்த 19ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதற்கிடையே தென் தமிழ்நாட்டின் மேல் பகுதிகளில் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 




 கடந்த இரண்டு நாட்களாகவே கேரளாவின் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.குறிப்பாக கேரளாவில் இன்றும் நாளையும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை  இன்னும் இரண்டு முதல் மூன்று நாட்களில் தொடங்க கூடும்.


தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்காலில் ஜூன் ஒன்றாம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஜூன் இரண்டாம் தேதியும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாம். 


அதேநேரத்தில் கர்நாடகாவிலும் ஜூன் இரண்டாம் தேதி ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வெயில் நிலவரம்:


 தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கும் முன்னே வெயில் கொளுத்தி எடுத்தது. இதனால் மக்கள் கடுமையாக பாதிப்படைந்து வந்தனர். அதன் பின்னர் கோடை மழை பெய்து வெப்பம் தணிந்து  குளுமை நிலவியது.இதனால் மக்கள் குஷியில் இருந்து வந்தனர். ஆனால் தற்போது  கத்திரி வெயில் இறுதி கட்டத்தில் மீண்டும் வெயில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடகடலோர மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக வெயில்  சுட்டெரித்தது.


கத்திரி வெயிலின் இறுதி நாளான நேற்று சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. திருத்தணி,வேலூரில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மதுரை, நாகை, தஞ்சை, உள்ளிட்ட 11 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.


நாட்டிலேயே நேற்றைய தினம் ராஜஸ்தானில் அதிகபட்சமாக வெப்பநிலை 123 டிகிரி வெயில் கொளுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?

news

தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்

news

டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு

news

சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்

news

திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!

news

கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!

news

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்

news

70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?

news

நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்