சென்னை: மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளதால், தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனால் தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
அதேபோல் தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நீலகிரியில் தொடர் மழை

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நான்காவது நாளாக இன்றும் கன மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 21.6 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அதேப்போல் கோவை மாவட்டம் சின்ன கல்லாரில் 11.4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இதன் பிறகு இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசா கடற்கரை பகுதிகளில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான நீலகிரி கோவை, திண்டுக்கல் திருப்பூர் தேனி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று கனமழையை எதிர்பார்க்கலாம். அப்போது ஏழு முதல் 11 சென்டிமீட்டர் வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளதால் இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று ஒரு சில இடங்களில் அதி கனமழைக்கும், கேரளாவில் இன்று ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}