சென்னை: மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளதால், தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனால் தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
அதேபோல் தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நீலகிரியில் தொடர் மழை

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நான்காவது நாளாக இன்றும் கன மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 21.6 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அதேப்போல் கோவை மாவட்டம் சின்ன கல்லாரில் 11.4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இதன் பிறகு இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசா கடற்கரை பகுதிகளில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான நீலகிரி கோவை, திண்டுக்கல் திருப்பூர் தேனி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று கனமழையை எதிர்பார்க்கலாம். அப்போது ஏழு முதல் 11 சென்டிமீட்டர் வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளதால் இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று ஒரு சில இடங்களில் அதி கனமழைக்கும், கேரளாவில் இன்று ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு...சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
உங்கள் வாழ்வில் அற்புதம் நடக்க வேண்டுமா?.. அப்படின்னா இந்த தினத்தை கொண்டாடுங்க!
பெண் முன்னேற்றம் என்பது ஒரு தனிமனித முன்னேற்றம் அல்ல!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
காண்பதும் கேட்பதும்.. உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லையே!
உண்மையான பெண் சுதந்திரம் என்ன தெரியுமா?.. Women empowerment
{{comments.comment}}