சென்னை: மத்திய வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளதால், தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனால் தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
அதேபோல் தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நீலகிரியில் தொடர் மழை
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நான்காவது நாளாக இன்றும் கன மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 21.6 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அதேப்போல் கோவை மாவட்டம் சின்ன கல்லாரில் 11.4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இதன் பிறகு இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசா கடற்கரை பகுதிகளில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான நீலகிரி கோவை, திண்டுக்கல் திருப்பூர் தேனி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று கனமழையை எதிர்பார்க்கலாம். அப்போது ஏழு முதல் 11 சென்டிமீட்டர் வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளதால் இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று ஒரு சில இடங்களில் அதி கனமழைக்கும், கேரளாவில் இன்று ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}