சென்னை: சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று எனது மகள் ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லால் சலாம். இப்படத்தில் கேமியோ ரோலில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவின்போது பேசிய ரஜினிகாந்த், நடிகர் விஜய் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். விஜய் நான் பார்க்க வளர்ந்த பிள்ளை. அவருக்கு நானோ அல்லது எனக்கு அவரோ போட்டியோ கிடையாது. நான் கூறிய காக்கா கழுகு கதையை தவறாகப் புரிந்து கொண்டு விட்டனர் . ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது என்று கூறியிருந்தார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசும்போது, எனது அப்பாவை சங்கி என்று கூறும்போது எனக்கு கோபமாக வரும். அவர் சங்கி அல்ல. சங்கியாக இருந்திருந்தால் இந்த படத்தில் அவர் அந்தப் பாத்திரத்தில் நடித்திருக்க மாட்டார் என்று கூறியிருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு இன்று நடிகர் ரஜினிகாந்த்திடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த், சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று ஐஸ்வர்யா எங்கேயும் கூறவில்லை. அப்பா ஆன்மீகவாதி, எல்லா மதங்களையும் விரும்புபவர். அவரை ஏன் இப்படி சொல்கிறார்கள் என்பதுதான் அவரது பார்வை என்றார் ரஜினிகாந்த்.
பட புரமோஷனுக்காக இப்படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசினாரா என்ற கேள்விக்கு, இல்லை.. அப்படியெல்லாம் இல்லை என்று மறுத்தார் ரஜினிகாந்த்.
லால் சலாம் படம் எப்படி வந்திருக்கு என்று கேள்விக்கு, சூப்பரா இருக்கு. நல்லா வந்திருக்கு. நீங்க பாருங்க. மத நல்லிணக்கம் குறித்து இதில் சொல்லிருக்காங்க என்றார் ரஜினிகாந்த்.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}