அது யாரு?.. அட.. நம்ம "சூப்பர் ஸ்டாரு".. பரபரப்பாகிப் போன புதுச்சேரி பழைய துறைமுகம்!

Jan 12, 2024,09:58 AM IST
புதுச்சேரி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படப்பிடிப்பு விறுவிறுப்பாகி வருகிறது.  புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதியில் நடந்த ஷூட்டிங்கின்போது, ரஜினிகாந்த்தைக் காண பெரும் திரளாக ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.

ஜெயிலர் என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த ரஜினிகாந்த் அதன் பிறகு இரு படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படம் லால் சலாம். இதை அவரது மகள் ஐஸ்வர்யார ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். இதில் கேமியோ ரோல்தான் செய்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் கபில் தேவும் இணைந்து நடித்துள்ளார்.

அனைவரும் எதிர்பார்க்கும் இன்னொரு படம் வேட்டையன். இது ரஜினிகாந்த்தின் 170வது படமாகும். இதை த. செ. ஞானவேல் இயக்கி வருகிறார். ஜெய்பீம் படத்துக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் படம் இது என்பதால் எதிர்பார்ப்பு ஏகமாக உள்ளது. 



வேட்டையன் படத்தில் ஏகப்பட்ட ஸ்டார்கள் குவிந்து கிடக்கின்றனர். அமிதாப் பச்சன் நடிக்கிறார். பஹத் பாசில், மஞ்சு வாரியர்,  துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா உள்ளிட்ட பலரும் இடம் பெற்றுள்ளனர். லால் சலாம் படத்தைத் தயாரிக்கும் லைக்கா நிறுவனம்தான் வேட்டையனையும் தயாரிக்கிறது. வழக்கம் போல அனிருத் இசையமைக்கிறார்.

கேரளாவில் ஆரம்பித்து அப்படியே நாகர்கோவில், நெல்லை, மும்பை என்று நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது புதுச்சேரி பக்கம் திரும்பியுள்ளது.  பழைய துறைமுகம் பகுதியில் ஷூட்டிங் நடந்தபோது ரஜினி படம் என்று தெரிந்து பெரும் கூட்டம் கூடி விட்டது.  ரஜினியும் ரசிகர்களை ஏமாற்றவில்லை. கேரவன் வேனிலிருந்தபடி ரசிர்களைப் பார்த்து கைகூப்பி வணங்கியும், கை அசைத்தும் மகிழ்வித்தார்.

வேட்டையன் என்பது, சந்திரமுகி படத்தில் வரும் ஒரு கேரக்டர். அந்த கேரக்டரில் ரஜினிகாந்த் அசத்தியிருப்பார். இப்போது அதையே படத்தில் தலைப்பாக வைத்திருப்பதால் டபுள் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்