சென்னை: திமுக கூட்டணியின் ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.
தமிழ்நாட்டிலிருந்து 6 ராஜ்யசபா எம்.பி. பதவியிடங்கள் காலியாகின்றன. இதில் திமுக கூட்டணிக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும். அந்த வகையில் திமுக சார்பில் பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டன. கூட்டணிக் கட்சிகள் வரிசையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசனுக்கு சீட் அளிக்கப்பட்டது.
அதிமுக சார்பில் வழக்கறிஞர்கள் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோருக்கு சீட் தரப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். கமல்ஹாசனும் இன்றே வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருமாவளவன், வைகோ உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இந்த நிகழ்வின்போது உடன் இருந்தனர்.
சட்டசபை கூடுதல் செயலாளர் சுப்பிரமணியத்திடம் அனைவரும் தங்களது வேட்புமனுக்களை வழங்கினர்.
சென்னையில் அதிகரித்து வரும் இரவு நேர வெப்ப நிலை.. இதுதான் காரணம்.. விழிப்புணர்வு தேவை
விஜய் 51.. தவெக தொண்டர்கள், ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்.. தலைவர்கள் வாழ்த்து
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு.. 3வது உலகப் போர் வெடிக்குமா?
Hot air balloon fire: பிரேசில் துயரம்.. ஹாட் ஏர் பலூன் தீப்பிடித்து எரிந்து விழுந்தது.. 8 பேர் பலி
போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை
வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்
இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?
ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!
{{comments.comment}}