சென்னை: திமுக கூட்டணியின் ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.
தமிழ்நாட்டிலிருந்து 6 ராஜ்யசபா எம்.பி. பதவியிடங்கள் காலியாகின்றன. இதில் திமுக கூட்டணிக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும். அந்த வகையில் திமுக சார்பில் பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டன. கூட்டணிக் கட்சிகள் வரிசையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசனுக்கு சீட் அளிக்கப்பட்டது.
அதிமுக சார்பில் வழக்கறிஞர்கள் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோருக்கு சீட் தரப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். கமல்ஹாசனும் இன்றே வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருமாவளவன், வைகோ உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இந்த நிகழ்வின்போது உடன் இருந்தனர்.
சட்டசபை கூடுதல் செயலாளர் சுப்பிரமணியத்திடம் அனைவரும் தங்களது வேட்புமனுக்களை வழங்கினர்.
தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு
முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது
கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை
இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?
‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை
10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!
செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து
{{comments.comment}}