சென்னை: திமுக கூட்டணியின் ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.
தமிழ்நாட்டிலிருந்து 6 ராஜ்யசபா எம்.பி. பதவியிடங்கள் காலியாகின்றன. இதில் திமுக கூட்டணிக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும். அந்த வகையில் திமுக சார்பில் பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டன. கூட்டணிக் கட்சிகள் வரிசையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசனுக்கு சீட் அளிக்கப்பட்டது.
அதிமுக சார்பில் வழக்கறிஞர்கள் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோருக்கு சீட் தரப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். கமல்ஹாசனும் இன்றே வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருமாவளவன், வைகோ உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இந்த நிகழ்வின்போது உடன் இருந்தனர்.
சட்டசபை கூடுதல் செயலாளர் சுப்பிரமணியத்திடம் அனைவரும் தங்களது வேட்புமனுக்களை வழங்கினர்.
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து
நயினார் நாகேந்திரனும் சுற்றுப்பயணத்திற்கு ரெடி.. அக்டோபர் முதல்.. அண்ணாமலை தகவல்
துரோகத்தைத் தவிர வேறு எவும் தெரியாதவர் இபிஎஸ் நன்றியை பற்றி பேசுகிறாரா?.. டிடிவி தினகரன்
வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்
பின் தொடராதீர்கள்.. போலீஸ் விதித்த புதிய கட்டுப்பாடு.. பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்த விஜய்
Nano Banana மோகம்.. புயலைக் கிளப்பிய கூகுள்.. ஆபத்தானது.. எச்சரிக்கும் நிபுணர்கள்!
மீண்டும் அதன் சுயரூபத்தை காண்பித்த தங்கம் விலை... இன்றும் புதிய உச்சம் தொட்டது!
இமாச்சலப் பிரதேசத்தை உலுக்கி எடுக்கும் கனமழை.. நிலச்சரிவில் மூன்று பேர் பலி
கைக்கூலிகள்.. யாரை சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.. அதிமுகவில் அடுத்து நடக்க போவது என்ன?
{{comments.comment}}