சென்னை: திமுக கூட்டணியின் ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.
தமிழ்நாட்டிலிருந்து 6 ராஜ்யசபா எம்.பி. பதவியிடங்கள் காலியாகின்றன. இதில் திமுக கூட்டணிக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும். அந்த வகையில் திமுக சார்பில் பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டன. கூட்டணிக் கட்சிகள் வரிசையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல்ஹாசனுக்கு சீட் அளிக்கப்பட்டது.
அதிமுக சார்பில் வழக்கறிஞர்கள் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோருக்கு சீட் தரப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். கமல்ஹாசனும் இன்றே வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருமாவளவன், வைகோ உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இந்த நிகழ்வின்போது உடன் இருந்தனர்.
சட்டசபை கூடுதல் செயலாளர் சுப்பிரமணியத்திடம் அனைவரும் தங்களது வேட்புமனுக்களை வழங்கினர்.
இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்
திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை
டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!
தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
{{comments.comment}}