லக்னோ: ராம நவமி தினத்தில் நடந்த அதிசயம் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி, ராமர் கோவிலில் ராமர் சிலையின் நெற்றில் பட்ட சூரிய ஒளியால் பக்தர்கள் திகைத்துள்ளனர்.
அயோத்தி ராமர் கோவில், கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி 22ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு பால ராமரை தரிசனம் செய்து ஆசி பெற்றனர். அதன் பின்னர் ஏராளமான பொது மக்கள் அங்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து ராமரின் ஆசியை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ராமநவமி நாளான இன்று ராமர் கோவிலில் இன்று மதியம் சுமார் 12.16 மணிக்கு கருவறையில் உள்ள ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிபடும் அரிய நிகழ்வு நடைபெற்றது. சூரியனின் ஒளி ராமரின் நெற்றியில் திலகம் இட்டது போல் பட்டது. இந்த காட்சி சுமார் 5 நிமிடம் மட்டுமே நீடித்தது. இந்த அரிய நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவி அனைத்து தரப்பினர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒளி ராமர் நெற்றியில் படும் விதத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் ராம கோஷம் எழுப்பி ராமரை வழிபட்டனர். ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பால ராமர் மஞ்சள் நிற ஆடை அலங்காரத்தில் காட்சியளித்தார். ராமருக்கு 56 வகையான பிரசாதங்கள் படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
Trisha: போதுமா.. இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா?.. வதந்திகளுக்கு த்ரிஷா கொடுத்த பதிலடி
ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட்நியூஸ்...சென்னை போட்டியை மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி
முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், விஜய் (பெரம்பூர்), நயினார் நாகேந்திரன் வேட்புமனு ஏற்பு
TN Assembly Elections: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026.. 7150 பேரின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை
பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு செக்? 'விஜய்', 'ஜோசப்' பெயர்களில் 4 சுயேட்சைகள் போட்டி
Motivational Story: உழைப்பே உயர்வு!
விஷால் விசிலும்.. விஷாலின் விளையாட்டுகள் 7
உலக சுகாதார தினம் .. ஆரோக்கியமே உண்மையான செல்வம்!
கருப்பே பேரழகு
{{comments.comment}}