லக்னோ: ராம நவமி தினத்தில் நடந்த அதிசயம் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி, ராமர் கோவிலில் ராமர் சிலையின் நெற்றில் பட்ட சூரிய ஒளியால் பக்தர்கள் திகைத்துள்ளனர்.
அயோத்தி ராமர் கோவில், கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி 22ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு பால ராமரை தரிசனம் செய்து ஆசி பெற்றனர். அதன் பின்னர் ஏராளமான பொது மக்கள் அங்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து ராமரின் ஆசியை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ராமநவமி நாளான இன்று ராமர் கோவிலில் இன்று மதியம் சுமார் 12.16 மணிக்கு கருவறையில் உள்ள ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிபடும் அரிய நிகழ்வு நடைபெற்றது. சூரியனின் ஒளி ராமரின் நெற்றியில் திலகம் இட்டது போல் பட்டது. இந்த காட்சி சுமார் 5 நிமிடம் மட்டுமே நீடித்தது. இந்த அரிய நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவி அனைத்து தரப்பினர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒளி ராமர் நெற்றியில் படும் விதத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் ராம கோஷம் எழுப்பி ராமரை வழிபட்டனர். ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பால ராமர் மஞ்சள் நிற ஆடை அலங்காரத்தில் காட்சியளித்தார். ராமருக்கு 56 வகையான பிரசாதங்கள் படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
தாயன்பு !
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
{{comments.comment}}