தஞ்சாவூர்: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் நவாஸ் கனி மற்றும் மயிலாடுதுறை சுதா ஆகியோருக்கு அய்யம்பேட்டையில் பிரமாண்ட வாகன அணிவகுப்புடன் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் அதன் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் இந்த பாராட்டு விழா நடத்தப்பட்டது. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி பெருவெற்றி பெற்றார். அதேபோல, மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுதா வெற்றி பெற்று எம்.பி. ஆகியுள்ளார்.

அவர்களுக்கு அய்யம்பேட்டை அஞ்சுமன் திருமண மண்டபத்தில் நேற்று இரவு பாராட்டு விழா நடைபெற்றது. தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் முஹம்மது சுல்தான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மௌலானா மௌலவி முஹம்மது ஷாகிர் ஜைனி கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம், மாவட்ட இணைச் செயலாளர் அப்துல் காசிம் ராஜாஜி, இணை பொருளாளர் ஜுல்பிகார் அகமது, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் நூர் முகம்மது, முகம்மது சித்திக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அஞ்சுமன் அறிவகம் ஜபருல்லாஹ், வாலன் அக்பர், சுலைமான் பாட்சா, முகம்மது அலி, அப்துல் மாலிக், ஜெய்லான் பாட்சா, இல்யாஸ் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்தனர். மாவட்ட செயலாளர் கமாலுதீன் ஃபைஜி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான் தொடக்க உரை நிகழ்த்தினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும் தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவருமான அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். எம்.பிக்கள் நவாஸ் கனி மற்றும் சுதா ஆகியோர் ஏற்புரை வழங்கினர். விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் சிறப்பு பேருரை ஆற்றினார்.
முன்னதாக, இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நகர எல்லையில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுப்போடு வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை அய்யம்பேட்டை - சக்கராப்பள்ளி பிரைமரி உள்ளிட்ட பல்வேறு பிரைமரி, மாவட்ட மற்றும் அணிகளின் நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்து இருந்தனர். விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், ஏராளமான ஜமாஅத்தார்களும், உலமா பெருமக்களும், இந்தியா கூட்டணியின் நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}