சென்னை: தமிழ்நாட்டில் இன்று ரமலான் மாதத் தொடக்கத்தைக் குறைக்கும் பிறை தென்படாத காரணத்தால், மார்ச் 2ம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜியார் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தலைமை காஜியார், டாக்டர் சலாஹுதீன் முகம்மது அயூப் அல் அஸாரி, அல் குவாதிரி அல் கஸ்நாசினி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரமதான் மாத புதிய பிறை இன்று தெரியவில்லை. இதனால் மார்ச் 2ம் தேதி புதிய ரமதான் மாதத்தின் முதல் நாளாக கருத்தில் கொண்டு அன்று முதல் ரமலான் நோன்புக் காலம் தொடங்குவதாக அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரம்ஜான் மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டு ரம்ஜான் மாதத்தின் இறுதி நாளில் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுவது வழக்கமாகும்.
அரபு நாடுகளில் மார்ச் 1ம் தேதி முதல் நோன்புக் காலம் தொடங்குகிறது. தமிழ்நாட்டிலும் இந்தியாவின் இதரப் பகுதிகளிலும் மார்ச் 2ம் தேதி முதல் நோன்பு தொடங்கவுள்ளது.
விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும் - விஜய் பேச்சு
ஜனநாயகன் படத்தில் 20 நிமிடம் கட்?.. ஏன் இப்படி வதந்தி பரப்பறீங்க.. தனஞ்செயன் ஆதங்கம்
சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; விஜய் பதிவு
மாம்பழ சின்னம் யாருக்கு?...பாமக வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.7,600 குறைவு
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசு... முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் சாடல்
டி20 உலகக் கோப்பை: இந்தியா உடனான போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான்...ஐசிசி அதிரடி அறிக்கை
அன்பு மாணவர்களே!
நீ மழை! (காதல் தொடர்கதை.. அத்தியாயம் 1)
{{comments.comment}}