சென்னை: தமிழ்நாட்டில் இன்று ரமலான் மாதத் தொடக்கத்தைக் குறைக்கும் பிறை தென்படாத காரணத்தால், மார்ச் 2ம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜியார் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தலைமை காஜியார், டாக்டர் சலாஹுதீன் முகம்மது அயூப் அல் அஸாரி, அல் குவாதிரி அல் கஸ்நாசினி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரமதான் மாத புதிய பிறை இன்று தெரியவில்லை. இதனால் மார்ச் 2ம் தேதி புதிய ரமதான் மாதத்தின் முதல் நாளாக கருத்தில் கொண்டு அன்று முதல் ரமலான் நோன்புக் காலம் தொடங்குவதாக அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரம்ஜான் மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டு ரம்ஜான் மாதத்தின் இறுதி நாளில் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுவது வழக்கமாகும்.
அரபு நாடுகளில் மார்ச் 1ம் தேதி முதல் நோன்புக் காலம் தொடங்குகிறது. தமிழ்நாட்டிலும் இந்தியாவின் இதரப் பகுதிகளிலும் மார்ச் 2ம் தேதி முதல் நோன்பு தொடங்கவுள்ளது.
5 தலைநகரங்கள், சாதியற்ற இட ஒதுக்கீடு" - நாம் தமிழர் தேர்தல் அறிக்கை 2026 ஐ வெளியிட்டார் சீமான்
எந்த சின்னத்தில் போட்டி? திமுக-மக்கள் நீதி மய்யம் இடையே தொடரும் இழுபறி
எங்களுடன் ஒப்பிட்டு தொகுதி கேட்காதீங்க...செல்வ பெருந்தகை வேண்டுகோள்
ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது - நயினார் நாகேந்திரன் அதிரடி
வியர்வையின்மணத்தை நறுமணமாக்குங்க.. Turn sweat into perfume
கலையும் மேகங்களாக இன்றைய தலைமுறை!!
போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட அத்தியாவசியத் துறை ஊழியர்கள் தபால் ஓட்டு போடலாம்
உன் அடி மனதுக் காதல்.. I know, your love is deep and true
கோடை விடுமுறை: 50 சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே
{{comments.comment}}