சென்னை: தமிழ்நாட்டில் இன்று ரமலான் மாதத் தொடக்கத்தைக் குறைக்கும் பிறை தென்படாத காரணத்தால், மார்ச் 2ம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜியார் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தலைமை காஜியார், டாக்டர் சலாஹுதீன் முகம்மது அயூப் அல் அஸாரி, அல் குவாதிரி அல் கஸ்நாசினி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரமதான் மாத புதிய பிறை இன்று தெரியவில்லை. இதனால் மார்ச் 2ம் தேதி புதிய ரமதான் மாதத்தின் முதல் நாளாக கருத்தில் கொண்டு அன்று முதல் ரமலான் நோன்புக் காலம் தொடங்குவதாக அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரம்ஜான் மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டு ரம்ஜான் மாதத்தின் இறுதி நாளில் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுவது வழக்கமாகும்.
அரபு நாடுகளில் மார்ச் 1ம் தேதி முதல் நோன்புக் காலம் தொடங்குகிறது. தமிழ்நாட்டிலும் இந்தியாவின் இதரப் பகுதிகளிலும் மார்ச் 2ம் தேதி முதல் நோன்பு தொடங்கவுள்ளது.
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
{{comments.comment}}