ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதர் கோயிலில் நடைபெறும் ராமலிங்க பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, வரும் ஜூன் நான்காம் தேதி காலை 7:00 மணி முதல் மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படும் எனவும், அந்த நேரத்தில் கோவில் தீர்த்தங்களில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
புனித தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாத கோவிலில் ராமாயண வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு வருடமும் ராமலிங்க பிரதிஷ்டை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது இத்தலத்தில் ராமாயண வரலாற்றை பக்தர்களுக்கு எடுத்துக் கூறும் விதமாக, ராமலிங்க பிரதிஷ்டை விழா 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது.இதில் ராமர், ராவணனை வதம் செய்த நிகழ்வு, விபீஷணர் பட்டாபிஷேகம், ராமலிங்க பிரதிஷ்டை போன்றவை இடம்பெறும்.
அந்த வகையில் இந்த வருடம் ராமலிங்கம் பிரதிஷ்டை விழா வரும் ஜூன் 3ம் தேதி தொடங்கி ஜூன் 5ம் தேதி வரை நடைபெறுகிறது.

அதன்படி,ஜூன் 3ம் தேதி மாலை திட்டக்குடி பகுதியில் ராமன், ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். ஜூன் 5ம் தேதி மதியம் 12 மணிக்கு மேல் கோவிலின் முதல் பிரகாரத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்த நிலையில் ராமேஸ்வரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு வரும் ஜூன் 4ஆம் தேதி கோவில் நடை அடைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் 4ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று காலை 7:00 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில் நடை அடைக்கப்படுகிறது. மேலும் கோவில் நடை அடைக்கப்படும் நேரத்தில் கோயில் தீர்த்தங்களில் புனித நீராடவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
லட்சியக் கனவை முன்னின்று நிறைவேற்றப் போவது நீங்கதான்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து
அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீங்க யாரும் ஹர்ட் ஆகாதீங்க.. தவெக தலைவர் விஜய்
கோவையை அதிர வைத்த.. மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 3 பேருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை!
தமிழக சட்டசபை தேர்தல் 2026 விஐபி தொகுதிகள்...எந்த தொகுதியில் யார் போட்டியிட வாய்ப்பு?
இந்தியா உதவியது ஏன்?... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
கேஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு திமுக தான் காரணம்...அண்ணாமலை சொன்ன காரணம்
ஈரான் போர் எப்பதான் முடியும்.. ஏன் இந்த சண்டை.. அடுத்து என்னதான் நடக்கும்?
வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு
ஓம்பிர்லாவை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்: மார்ச் 9 அன்று லோக்சபாவில் முக்கிய நகர்வு
{{comments.comment}}