ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதர் கோயிலில் நடைபெறும் ராமலிங்க பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, வரும் ஜூன் நான்காம் தேதி காலை 7:00 மணி முதல் மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படும் எனவும், அந்த நேரத்தில் கோவில் தீர்த்தங்களில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
புனித தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாத கோவிலில் ராமாயண வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு வருடமும் ராமலிங்க பிரதிஷ்டை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது இத்தலத்தில் ராமாயண வரலாற்றை பக்தர்களுக்கு எடுத்துக் கூறும் விதமாக, ராமலிங்க பிரதிஷ்டை விழா 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது.இதில் ராமர், ராவணனை வதம் செய்த நிகழ்வு, விபீஷணர் பட்டாபிஷேகம், ராமலிங்க பிரதிஷ்டை போன்றவை இடம்பெறும்.
அந்த வகையில் இந்த வருடம் ராமலிங்கம் பிரதிஷ்டை விழா வரும் ஜூன் 3ம் தேதி தொடங்கி ஜூன் 5ம் தேதி வரை நடைபெறுகிறது.

அதன்படி,ஜூன் 3ம் தேதி மாலை திட்டக்குடி பகுதியில் ராமன், ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். ஜூன் 5ம் தேதி மதியம் 12 மணிக்கு மேல் கோவிலின் முதல் பிரகாரத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்த நிலையில் ராமேஸ்வரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு வரும் ஜூன் 4ஆம் தேதி கோவில் நடை அடைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் 4ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று காலை 7:00 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில் நடை அடைக்கப்படுகிறது. மேலும் கோவில் நடை அடைக்கப்படும் நேரத்தில் கோயில் தீர்த்தங்களில் புனித நீராடவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
காங்கிரஸால் காயப்பட்டுள்ளோம்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. திமுக
ரோஜா பூ கொடுத்து புதிய மாணவர்களை அன்புடன் வரவேற்ற தேவகோட்டை ஆசிரியர்கள்!
புதிய கல்வியாண்டு.. அனைவரும் இணைந்து அறிவுச் சுடரை உயர்த்திப் பிடிப்போம்!
Tamil Life Qoutes: தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் .. அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.!
மாணவர் நலனைக் காப்பாற்றுங்கள்.. அமைச்சரிடம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை
Vipuvana sangadahara chaturthi: விபுவன சங்கடஹர சதுர்த்தி.. விரதம் இருந்து விநாயகனை வழிபடுவோம்
லீவு முடிஞ்சாச்சு.. பள்ளிக்கூடம் திறந்தாச்சு.. உற்சாகமாக திரண்டு வந்த மாணவ, மாணவியர்!
Om Sai.. அன்பே சாய்!
Remembering SPB: S. P. பாலசுப்ரமணியம் .. ஒரு தெய்வீக ஆன்மா!
{{comments.comment}}