ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதர் கோயிலில் நடைபெறும் ராமலிங்க பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, வரும் ஜூன் நான்காம் தேதி காலை 7:00 மணி முதல் மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படும் எனவும், அந்த நேரத்தில் கோவில் தீர்த்தங்களில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
புனித தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாத கோவிலில் ராமாயண வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு வருடமும் ராமலிங்க பிரதிஷ்டை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது இத்தலத்தில் ராமாயண வரலாற்றை பக்தர்களுக்கு எடுத்துக் கூறும் விதமாக, ராமலிங்க பிரதிஷ்டை விழா 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது.இதில் ராமர், ராவணனை வதம் செய்த நிகழ்வு, விபீஷணர் பட்டாபிஷேகம், ராமலிங்க பிரதிஷ்டை போன்றவை இடம்பெறும்.
அந்த வகையில் இந்த வருடம் ராமலிங்கம் பிரதிஷ்டை விழா வரும் ஜூன் 3ம் தேதி தொடங்கி ஜூன் 5ம் தேதி வரை நடைபெறுகிறது.
அதன்படி,ஜூன் 3ம் தேதி மாலை திட்டக்குடி பகுதியில் ராமன், ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். ஜூன் 5ம் தேதி மதியம் 12 மணிக்கு மேல் கோவிலின் முதல் பிரகாரத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்த நிலையில் ராமேஸ்வரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு வரும் ஜூன் 4ஆம் தேதி கோவில் நடை அடைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் 4ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று காலை 7:00 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில் நடை அடைக்கப்படுகிறது. மேலும் கோவில் நடை அடைக்கப்படும் நேரத்தில் கோயில் தீர்த்தங்களில் புனித நீராடவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி.. இன்று இரவுக்குள் கைது?
விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை.. தவெகவை சரமாரியாக விமர்சித்த ஹைகோர்ட் நீதிபதி செந்தில்குமார்
கரூர் சம்பவம்... சிறப்பு புலனாய்வு குழு நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்: கீழடி குறித்த முதல்வர் முக ஸ்டாலினின் நெகிழ்ச்சி பதிவு!
இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பாஜக: முதல்வர் முக ஸ்டாலின் விமர்சனம்
தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமாரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி... மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
210 தொகுதிகளில் அதிமுக வெல்லும்..அதற்கு சாட்சி தருமபுரியில் கூடிய இந்த கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மாளிகை, நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
{{comments.comment}}