- பாரதிராஜன்
எனக்கு சிறுவயதிலேயே அதாவது என் 10வயதில் இருதயத்தில் உள்ள "அயோடிக் " வால்வு பழுதானதுஎன்பதை கண்டுபிடித்த டாக்டர் லேட் வைத்தியநாதன், அதன்பிறகு வேலூரைச் சேர்ந்த லேட் டாக்டர் பிரகாசம் ,பிறகு செரியன் ஜூனியர் &சீனியர், கோவை அரசு டாக்டர் முனிரத்தினம் செட்டி, டாக்டர் திருவேங்கடம், டாக்டர் விக்டர் சாமுவேல், தணிகாசலம் பட்டியல் பெரியது. PENIDURE LA 12 ஊசி மாதாமாதம் போட்டுக்கொண்டு காலத்தை ஒட்டினேன்.
இதனிடையே வேலூரிலுள்ள சிஎம்சி மருத்துவ மனையில் 1977முதல் 1980 வரை வருடாவருடம் டிசம்பரில் மாஸ்டர் செக்அப் கட்டணம் ரூ.50/_மட்டுமே. பிறகு அதுவும் இல்லை. வேலை காரணமாக அரை கி.மீட்டர் நடந்தால் கூட மூச்சு விட முடியாத நிலை.
1995 ஜூலை மாதம் ஸ்டேன்லி மருத்துவ மனையில் ஒரு மாதம் தங்கி ஆன்ஞியோகிராம் எடுப்பதாக சொல்லி எடுக்காமல் வீட்டுக்கு வந்து விட்டேன். தொடந்து மாத்திரை.

2008ல் முதலில் டாக்டர் சிவகடாட்சம் அவர்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை தொடர்ந்து மருந்து மாத்திரை. 2010 ஏப்ரலில் மூச்சுவிட முடியாத நிலையில் பாரதிராஜா மருத்துவ மனையில் ஆஞ்சியோ அதனை தொடர்ந்து ஒபன் ஹார்ட் சர்ஜரி, பதம் செய்ய பட்ட பன்றி இதயம் பொருத்தப்பட்டு இன்றுவரை அசிட்ரோம் 2எம்ஜி மாத்திரை வாழ்க்கை.
16/04/2010 சர்ஜரி, 18/04/2010 ல் இரவு 11/00மணி அளவில் பல்ஸ் குறைய அப்போதிருந்த செவிலியர் அமுதா டாக்டர். அவிஜத் பாசுக்கு போன் செய்ய நள்ளிரவில் இரண்டு முறை வந்து என்னை பரிசோதித்த டாக்டர் தான் என் தெய்வம்.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)
தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசி மிரட்டியதாக.. யூடியூபர் IPDS திருநாவுக்கரசு, 2 திமுகவினர்அதிரடி கைது
தவெக கூட்டணிக் கூட்டம்: தமிழக அரசியலின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்குமா?
மூவரி கவிதைகள்.. சிறுமியின் சிரிப்பில் ஜவ்வு மிட்டாய் காளியின் நாவு
மருத்துவர் தினம்.. டாக்டர் தான் என் தெய்வம்!
சிந்தனைச் சிதறல்.. விதையிட்டு வளர்த்தவருக்கே முதலுரிமை!
National Doctor's Day: இந்தியாவில் டாக்டர்கள் தினம் ஏன் கொண்டாடப்படுது தெரியுமா..?
தமிழ்மாமணி எழுத்தாளர் இரா. கலைச்செல்விக்கு கலை ரத்னா விருது
அப்பா கண்ணாடி!
Short Story: கோகிலா
{{comments.comment}}