அபாயகரமாக மாறும் Deepfake Technology.. ராஷ்மிகா மந்தனா முகத்தை வைத்து அத்துமீறல்!

Nov 06, 2023,06:35 PM IST

மும்பை: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து ஏஐ தொழில்நுட்பத்தின் Deepfake முறையைப் பயன்படுத்தி வெளியான வீடியோ பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


உலகம் முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் வேகமாக பரவி வருகிறது. இதில் பல நல்லது இருந்தாலும் கூட வழக்கம் போல ஒரு கூட்டம் இதை தவறாகவும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் பல விபரீதங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக பல்வேறு நாடுகளும் அச்சம் தெரிவித்துள்ளன.


30 வருடத்துக்கு முந்தைய இளமையான ரஜினியை உருவாக்குவது, எம்ஜிஆருக்கு உருவம் கொடுப்பது இப்படி பல ஜாலியான நல்ல விஷயங்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் இருந்தாலும் கூட பல போலியான வீடியோக்களை, படங்களை உருவாக்கவும் வாய்ப்பிருப்பதால் இது அபாயகரமான தொழில்நுட்பமாக மாறி வருகிறது.




இந்த நிலையில் ஒரு வைரல் வீடியோவை ராஷ்மிகா மந்தனாவை வைத்து விபரீதமாக மாற்றி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது ஒரு கும்பல். இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஜாரா படேல். இவர் கவர்ச்சிகரமான படங்கள், வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அப்படித்தான் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதாவது கவர்ச்சிகரமான உடையில் லிப்ட் ஒன்றுக்குள் நுழைவது போல அது இருக்கும்.


அந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் அதே வீடியோவை வைத்து  ராஷ்மிகா மந்தனா முகத்தை அதில் திணித்து Deepfake Technology மூலம் போலியான வீடியோவை உருவாக்கி சிலர் வலம் வர வைத்துள்ளனர். இந்த வீடியோ மிக வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பார்க்க தத்ரூபமாக ராஷ்மிகா மாதிரியே இந்த வீடியோ காணப்படுகிறது. இதுதான் ஏஐ டெக்னாலஜியின் அபாயம்.


இந்த வீடியோவை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. நடிகர் அமிதாப் பச்சன், சம்பந்தப்பட்ட வீடியோவை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்