- ஸ்வர்ணலட்சுமி
ரஸ்தாளி வாழைப்பழம்.. ஆங்கிலத்தில் இதனை "Rasthali banana" என்றும் ஹிந்தியில்" Rasbhari kela" என்றும் அழைக்கப்படுகிறது. ரஸ்தாளி வாழை பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உட்கொள்ள கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம் ஆகும்.
பொதுவாக வாழைப்பழத்தில் பொட்டாசியம்,வைட்டமின் ஏ,வைட்டமின் பி6, வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள்,மக்னீசியம் போன்றவை அடங்கியுள்ளன. உண்பதற்கு ரஸ்தாளி மிகவும் சுவையாக இருக்கும் அதனால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். உண்பதற்கு சுவையாக இருப்பினும் இந்த பழம் வாத உடம்பு காரர்களுக்கு ஆகாது என்று கூறுவார்கள். இப் பழத்தை சாப்பிட்டதும் வயிறு நிரம்பியதைப் போன்று திம்மென்று ஆகிவிடும். பசியை மந்தப்படுத்தும் தன்மை உடையது.

பாட்டி வைத்தியம் : வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த நன்கு கனிந்த ரஸ் தாளியை ஒரு டம்ளர் நீரில் நன்றாக பிசைந்து கரைத்துக் குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும் என்று கூறுவார்கள். பலர் உணவு உண்டதும் ரஸ்தாளி பழம் உண்பதை பழக்கமாக வைத்திருப்பர். ஆனால் இப்படி உண்பது தவறு. சாப்பிட்டவுடன் இப் பழம் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படும்.
வளரும் குழந்தைகளுக்கு இப்ப பழத்தினை கொடுப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
முக்கிய பயன்கள்:
இப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் வயிற்று எரிச்சலை குறைப்பதுடன் அல்சருக்கு மிகவும் நல்லது. மேலும் கண்களுக்கு நல்லது என்றும் கண் பார்வை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. உடல் எடை அதிகரிக்க விரும்புவோர் இப்பழத்தை அளவாக எடுத்துக் கொள்ளலாம்.மன அழுத்தம் குறைக்கவும், மனதை அமைதி படுத்தவும் இப்ப பழம் பெரிய நன்மை பயக்கிறது. இப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் குளுக்கோஸ் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. மேலும்
உடல் சோர்வை நீக்கும், மன அழுத்தத்தை குறைக்கும், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
.
இப்பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இப்பழத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உடனடி ஆற்றலை வழங்குகின்றன. இது உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டியவர்களுக்கும் நன்மை பயக்கும்.
குறிப்பு :நீரிழிவு நோயாளிகள் இப்பழத்திணை அளவுடன் எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும். அதிலும் வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். ஏதேனும் உடல் நலக் குறைபாடுகள் இருப்பின் உணவில் சேர்த்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகி அவர் ஆலோசனைப்படி சேர்த்துக் கொள்வது சிறந்தது.
மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}