- ஸ்வர்ணலட்சுமி
ரஸ்தாளி வாழைப்பழம்.. ஆங்கிலத்தில் இதனை "Rasthali banana" என்றும் ஹிந்தியில்" Rasbhari kela" என்றும் அழைக்கப்படுகிறது. ரஸ்தாளி வாழை பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உட்கொள்ள கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம் ஆகும்.
பொதுவாக வாழைப்பழத்தில் பொட்டாசியம்,வைட்டமின் ஏ,வைட்டமின் பி6, வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள்,மக்னீசியம் போன்றவை அடங்கியுள்ளன. உண்பதற்கு ரஸ்தாளி மிகவும் சுவையாக இருக்கும் அதனால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். உண்பதற்கு சுவையாக இருப்பினும் இந்த பழம் வாத உடம்பு காரர்களுக்கு ஆகாது என்று கூறுவார்கள். இப் பழத்தை சாப்பிட்டதும் வயிறு நிரம்பியதைப் போன்று திம்மென்று ஆகிவிடும். பசியை மந்தப்படுத்தும் தன்மை உடையது.

பாட்டி வைத்தியம் : வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த நன்கு கனிந்த ரஸ் தாளியை ஒரு டம்ளர் நீரில் நன்றாக பிசைந்து கரைத்துக் குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும் என்று கூறுவார்கள். பலர் உணவு உண்டதும் ரஸ்தாளி பழம் உண்பதை பழக்கமாக வைத்திருப்பர். ஆனால் இப்படி உண்பது தவறு. சாப்பிட்டவுடன் இப் பழம் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படும்.
வளரும் குழந்தைகளுக்கு இப்ப பழத்தினை கொடுப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
முக்கிய பயன்கள்:
இப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் வயிற்று எரிச்சலை குறைப்பதுடன் அல்சருக்கு மிகவும் நல்லது. மேலும் கண்களுக்கு நல்லது என்றும் கண் பார்வை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. உடல் எடை அதிகரிக்க விரும்புவோர் இப்பழத்தை அளவாக எடுத்துக் கொள்ளலாம்.மன அழுத்தம் குறைக்கவும், மனதை அமைதி படுத்தவும் இப்ப பழம் பெரிய நன்மை பயக்கிறது. இப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் குளுக்கோஸ் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. மேலும்
உடல் சோர்வை நீக்கும், மன அழுத்தத்தை குறைக்கும், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
.
இப்பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இப்பழத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உடனடி ஆற்றலை வழங்குகின்றன. இது உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டியவர்களுக்கும் நன்மை பயக்கும்.
குறிப்பு :நீரிழிவு நோயாளிகள் இப்பழத்திணை அளவுடன் எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும். அதிலும் வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். ஏதேனும் உடல் நலக் குறைபாடுகள் இருப்பின் உணவில் சேர்த்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகி அவர் ஆலோசனைப்படி சேர்த்துக் கொள்வது சிறந்தது.
மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}