ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் எப்படி இருக்கார்.. உடல்நிலைக்கு என்ன? அப்பல்லோ விளக்கம்

Nov 26, 2024,11:13 AM IST

சென்னை : ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மாலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரது உடல்நிலைக்கு என்ன என்பது பற்றி பலரும் கவலை தெரிவித்து வந்தனர்.


இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பவர் சக்திகாந்த தாஸ். 67 வயதாகும் ஒடிசாவை சேர்ந்த இவர், தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இவர் முக்கிய பணிகளில் பணியாற்றி உள்ளார். அடுத்த மாதத்துடன் இவரது பதவிக்காலம் நிறைவடைகிறது. இதற்கிடையில் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வந்த அவருக்கு நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.




அவர் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. அவரது உடல்நிலைக்கு என்ன ஆயிற்று என்ற கேள்விகளும் எழ துவங்கின. இந்நிலையில் சக்திகாந்த தாசின் உடல்நிலை குறித்து சென்னை அப்பல்லோ நிர்வாகம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 


அதில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசிற்கு அசிடிட்டி ஏற்பட்டதால் நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். கவலைப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்