சென்னை : ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மாலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரது உடல்நிலைக்கு என்ன என்பது பற்றி பலரும் கவலை தெரிவித்து வந்தனர்.
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பவர் சக்திகாந்த தாஸ். 67 வயதாகும் ஒடிசாவை சேர்ந்த இவர், தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இவர் முக்கிய பணிகளில் பணியாற்றி உள்ளார். அடுத்த மாதத்துடன் இவரது பதவிக்காலம் நிறைவடைகிறது. இதற்கிடையில் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வந்த அவருக்கு நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. அவரது உடல்நிலைக்கு என்ன ஆயிற்று என்ற கேள்விகளும் எழ துவங்கின. இந்நிலையில் சக்திகாந்த தாசின் உடல்நிலை குறித்து சென்னை அப்பல்லோ நிர்வாகம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசிற்கு அசிடிட்டி ஏற்பட்டதால் நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். கவலைப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி
சந்தோஷம்!
{{comments.comment}}