சென்னை : ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மாலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரது உடல்நிலைக்கு என்ன என்பது பற்றி பலரும் கவலை தெரிவித்து வந்தனர்.
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பவர் சக்திகாந்த தாஸ். 67 வயதாகும் ஒடிசாவை சேர்ந்த இவர், தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இவர் முக்கிய பணிகளில் பணியாற்றி உள்ளார். அடுத்த மாதத்துடன் இவரது பதவிக்காலம் நிறைவடைகிறது. இதற்கிடையில் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வந்த அவருக்கு நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. அவரது உடல்நிலைக்கு என்ன ஆயிற்று என்ற கேள்விகளும் எழ துவங்கின. இந்நிலையில் சக்திகாந்த தாசின் உடல்நிலை குறித்து சென்னை அப்பல்லோ நிர்வாகம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசிற்கு அசிடிட்டி ஏற்பட்டதால் நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். கவலைப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?
முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?
இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இசைஞானி என்னும் இசைத்தோணி!
Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)
பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்
இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து
கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!
{{comments.comment}}