சென்னை : ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மாலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரது உடல்நிலைக்கு என்ன என்பது பற்றி பலரும் கவலை தெரிவித்து வந்தனர்.
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பவர் சக்திகாந்த தாஸ். 67 வயதாகும் ஒடிசாவை சேர்ந்த இவர், தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இவர் முக்கிய பணிகளில் பணியாற்றி உள்ளார். அடுத்த மாதத்துடன் இவரது பதவிக்காலம் நிறைவடைகிறது. இதற்கிடையில் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வந்த அவருக்கு நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. அவரது உடல்நிலைக்கு என்ன ஆயிற்று என்ற கேள்விகளும் எழ துவங்கின. இந்நிலையில் சக்திகாந்த தாசின் உடல்நிலை குறித்து சென்னை அப்பல்லோ நிர்வாகம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசிற்கு அசிடிட்டி ஏற்பட்டதால் நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். கவலைப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}