டெல்லி: இந்தியாவின் பொருளாதார சூழல் வலுவாக இருப்பதால் 7 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்த ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். அதேசமயம், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, தொடர்ந்து 8வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. 6 உறுப்பினர்களைக் கொண்ட கொள்கை வகுப்புக் கமிட்டியில் 4-2 என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளை சக்கிகாந்த தாஸ் அறிவித்தார். இதை அறிவித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், இந்தியாவின் பொருளாதாராம் வலுவான அடித்தளத்துடன் கூடியதாகும். அது வலுவான நிலையில் இருப்பதால் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளோம். முன்பு இது 7 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது.

உலகம், ஒரு நெருக்கடியிலிருந்து மீண்டால் அடுத்த நெருக்கடி பின்னாடியே காத்திருக்கிறது. இந்த சூழலுக்கு மத்தியிலும் கூட இந்தியாவின் பொருளாதார அடித்தளம் வலுவாக இருப்பது ஆரோக்கியமானது, மகிழ்ச்சி தரக் கூடியதாகும். ஸ்திரமான வளர்ச்சியை நாம் காணக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
பணவீக்கத்திற்கு எதிரான நமது போராட்டம் கடுமையானதாகவே இருக்கிறது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இதன் பொருட்டே ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அது 6.5 சதவீதமாகவே தொடரும். எட்டாவது முறையாக நாம் மாற்றங்களை செய்யாமல் தவிர்த்துள்ளோம் என்றார் அவர்.
முன்னதாக ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை எதிர்பார்த்து மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் உயர்வு கண்டு காணப்பட்டது. அதேபோல தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் உயர்வு காணப்பட்டது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}