பெற்றோர்களே கவனம்.. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி. ரத்து.. நாளை முதல் புதிய விதி அமல்!

May 30, 2024,09:58 PM IST

சென்னை: சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி.ரத்து செய்வதுடன்  ரூ.25,000 அபராதமும், 25 வயது ஆகும் வரை ஓட்டுனர் உரிமமும் வழங்கப்படாது என்று புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவை நாளை முதல் அமலுக்கு வருகின்றன.


சாலை விபத்துக்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து விபத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன. எத்தனை வகையாக விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் விபத்துக்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் தான் உள்ளன. இதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்தில்  18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டுவதனால் தான் அதிகளவில்  விபத்துக்கள் நடப்பது கண்டறியப்பட்டுள்ளது.




இந்த விபத்துக்களை தடுக்கும் பொறுட்டு புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. இந்த விதிமுறைகள் ஜூன் 1ம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. மத்திய மோட்டார் வாகன சட்டம் 2019ஐ திருத்தத்தின்படி, இனிமேல் 18 வயதிற்கு உட்பட்டோர் வாகனம் ஓட்டினால் பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.


அதன்படி, 18 வயது முடியாத சிறுவர்கள் கார் மற்றும் பைக் ஓட்டி பிடிபட்டால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்று எனப்படும் ஆர்.சி ரத்து செய்யப்படும். வாகனம் ஓட்டி பிடிபடும் சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். அவர்களுக்கு 25 வயதாகும் வரை ஓட்டுனர் உரிமமும் வழங்கப்படாது. இந்த விதிமுறைகள் நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.


சமீபத்தில் புனே நகரில் 17 வயது சிறுவன் போர்ஷ் காரை ஓட்டிச் சென்று இரண்டு பேரை அநியாயமாக ஏற்றிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அந்த சிறுவன் உடனடியாக விடுவிக்கப்பட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.   அதேபோல இன்னொரு ஊரில் சிறுவன் ஒருவன், திடீரென ஆம்புலன்ஸை இயக்கி ஒரு பெண்ணை இடித்துத் தள்ளி காயப்படுத்திய சம்பவமும் நடந்தது. சிறார்கள் பலர் இப்போது டூவீலர்கள் ஓட்டியும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

ஓய்வூதியத் திட்டம் ஏமாற்று வேலை - நிர்மல் குமார் பேட்டி

news

அதிரடி காட்டும் தங்கம் விலை...அதிர்ச்சியில் மக்கள்...ஒரே நாளில் ரூ.1280 உயர்வு

news

பாரதிராஜா நலமாக உள்ளார்... அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை

news

யாருடன் கூட்டணி என ஜன.,9 மாநாட்டில் அறிவிப்பு...தேமுதிக பிரேமலதா திட்டவட்டம்

news

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு

news

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல்...புதிதாக பெயர் சேர்க்க 11.71 லட்சம் பேர் மனு

news

ஜனவரி 9 மற்றும் 10ம் தேதிகளில் கனமழை பெய்யவாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்!

news

இது அண்ணன்-தம்பி பொங்கல்...பராசக்தி ஆடியோ விழாவில் சிவகார்த்திகேயன் சொன்ன செம தகவல்

news

மோடி பொங்கல் விழா: திருச்சியில் அமித்ஷா கொண்டாட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்