சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்கள் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மே 20 ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கையும், மே 17 ,18 ,19, 21 ஆகிய நான்கு நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் ஐந்து நாட்கள் கன முதல் மிக கனமழைக் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தற்போது பரவலாக ஒரு சில மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்து வருகிறது. இதனால் தற்போது கோடை வெயிலின் தாக்கம் முழுமையாக தணிந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்கள் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் ஒரு சில இடங்களில் 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாம். குறிப்பாக மே இருபதாம் தேதி 21 சென்டிமீட்டர்க்கு மேல் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாம்.
அதனால் மே 20ஆம் தேதி தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், இன்று(17),18, 19, 21, ஆகிய நான்கு நாட்கள் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கபட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தவிர கர்நாடகாவில் இன்று கனமழைக்கும், நாளை முதல் 4 நாட்கள் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. கேரளாவில் இன்று கனமழைக்கும், நாளை முதல் 4 நாட்கள் மிக கனமழைக்கும், மே 20 ஆம் தேதி அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}