சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்கள் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மே 20 ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கையும், மே 17 ,18 ,19, 21 ஆகிய நான்கு நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் ஐந்து நாட்கள் கன முதல் மிக கனமழைக் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தற்போது பரவலாக ஒரு சில மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்து வருகிறது. இதனால் தற்போது கோடை வெயிலின் தாக்கம் முழுமையாக தணிந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்கள் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் ஒரு சில இடங்களில் 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாம். குறிப்பாக மே இருபதாம் தேதி 21 சென்டிமீட்டர்க்கு மேல் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாம்.
அதனால் மே 20ஆம் தேதி தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், இன்று(17),18, 19, 21, ஆகிய நான்கு நாட்கள் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கபட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தவிர கர்நாடகாவில் இன்று கனமழைக்கும், நாளை முதல் 4 நாட்கள் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. கேரளாவில் இன்று கனமழைக்கும், நாளை முதல் 4 நாட்கள் மிக கனமழைக்கும், மே 20 ஆம் தேதி அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}