சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்கள் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மே 20 ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கையும், மே 17 ,18 ,19, 21 ஆகிய நான்கு நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் ஐந்து நாட்கள் கன முதல் மிக கனமழைக் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தற்போது பரவலாக ஒரு சில மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்து வருகிறது. இதனால் தற்போது கோடை வெயிலின் தாக்கம் முழுமையாக தணிந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்கள் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் ஒரு சில இடங்களில் 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாம். குறிப்பாக மே இருபதாம் தேதி 21 சென்டிமீட்டர்க்கு மேல் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாம்.
அதனால் மே 20ஆம் தேதி தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், இன்று(17),18, 19, 21, ஆகிய நான்கு நாட்கள் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கபட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தவிர கர்நாடகாவில் இன்று கனமழைக்கும், நாளை முதல் 4 நாட்கள் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. கேரளாவில் இன்று கனமழைக்கும், நாளை முதல் 4 நாட்கள் மிக கனமழைக்கும், மே 20 ஆம் தேதி அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}