சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்கள் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மே 20 ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கையும், மே 17 ,18 ,19, 21 ஆகிய நான்கு நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் ஐந்து நாட்கள் கன முதல் மிக கனமழைக் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தற்போது பரவலாக ஒரு சில மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்து வருகிறது. இதனால் தற்போது கோடை வெயிலின் தாக்கம் முழுமையாக தணிந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்கள் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் ஒரு சில இடங்களில் 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாம். குறிப்பாக மே இருபதாம் தேதி 21 சென்டிமீட்டர்க்கு மேல் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாம்.
அதனால் மே 20ஆம் தேதி தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், இன்று(17),18, 19, 21, ஆகிய நான்கு நாட்கள் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கபட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தவிர கர்நாடகாவில் இன்று கனமழைக்கும், நாளை முதல் 4 நாட்கள் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது. கேரளாவில் இன்று கனமழைக்கும், நாளை முதல் 4 நாட்கள் மிக கனமழைக்கும், மே 20 ஆம் தேதி அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}