Red Alert: மும்பை, தானேயில்.. வெளுத்து வாங்கும் கன மழை.. மக்களே உஷாரா இருங்க!

Sep 15, 2025,11:00 AM IST

மும்பை: மும்பை, தானே, ராய்காட் பகுதிகளில் IMD ரெட் அலர்ட் விடுத்துள்ளது. 


திங்கட்கிழமை காலை முதல் மும்பையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அலுவலகம் செல்லும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிப்பட்டனர். செப்டம்பர் 16 முதல் 18 வரை மிதமான மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. 


மும்பையில் நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. குறிப்பாக, கிங்ஸ் சர்க்கிள் மற்றும் மாதுங்கா மார்க்கெட் பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மழை காரணமாக சென்ட்ரல் ரயில்வேயின் குர்லா ஸ்டேஷனிலும், வெஸ்டர்ன் ரயில்வேயின் பாந்த்ரா ரயில் நிலையத்திலும் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் உள்ளூர் மின்சார ரயில்கள் தாமதமாக வந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.




இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்ய ஆரம்பித்தது. இது திங்கட்கிழமை காலையிலும் தொடர்ந்தது. இதனால் கிங்ஸ் சர்க்கிள் போன்ற தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் இருந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.


IMD அறிக்கையின்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி முதல் திங்கட்கிழமை காலை 5:30 மணி வரை கொலாபாவில் அதிகபட்சமாக 88.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பாந்த்ராவில் 82 மி.மீ, பைகுல்லாவில் 73 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மஹுல் டாடா பவர் ஸ்டேஷனில் 70.5 மி.மீ, ஜூஹூவில் 45 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சாண்டாக்ரூஸ் மற்றும் மஹாலக்ஷ்மி பகுதிகளில் குறைவான மழை பதிவாகியுள்ளது. இங்கு முறையே 36.6 மி.மீ மற்றும் 36.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது என்று IMD அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


கனமழை காரணமாக மும்பை மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இயல்பு நிலை பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. IMD ரெட் அலர்ட் விடுத்திருந்ததால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ரெட் அலர்ட் என்பது மிக மோசமான வானிலை நிலையை குறிக்கிறது. இந்த நேரத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

சந்தோஷம்!

news

நம்பிக்கை அதானே எல்லாம்!

news

அன்பு மகிழ்ச்சியைப் பரப்பும் ஹோலி.. Bonfire of Unity: India’s Vibrant Celebration

அதிகம் பார்க்கும் செய்திகள்