இன்ஜினியரிங் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடக்கம்.. தொழிற்கல்வி இயக்குனரகம்!

May 06, 2025,04:56 PM IST

சென்னை: இன்ஜினியரிங் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடங்கும் என  தொழிற்கல்வி இயக்குனராகம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையடுத்து பொறியியல்  கல்லூரிகளில் உள்ள 1.60 லட்சம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 


இந்த நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு நாளை தொடங்கும் என தொழிற்கல்வி இயக்குனராகம் தெரிவித்துள்ளது. 


அதன்படி, பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு நாளை காலை 10 மணிக்கு  தொடங்கி ஜூன் ஆறு வரை நடைபெறும்.

www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்  எனவும் தெரிவித்துள்ளது.




மேலும், +2 தேர்வு ரிசல்ட் மே 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதற்கான  தரவரிசை பட்டியல் ஜூலை 2ஆம் வாரம் வெளியிடப்படும் எனவும், இதற்கான கலந்தாய்வுகள் ஜூலை  இறுதியில் தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க இருப்பதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்