"சுரங்கப்பாதைக்குள்.. 25 நாட்களுக்கு போதுமான உணவு இருக்கு".. மீட்கப்பட்ட தொழிலாளர் தகவல்!

Nov 29, 2023,05:49 PM IST

- மஞ்சுளா தேவி


உத்தரகாசி: சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்கள் நேற்று மாலை மீட்கப்பட்ட நிலையில், சுரங்கத்திற்குள் இன்னும் 25 நாட்களுக்கு தேவையான உணவு இருப்பதாக மீட்கப்பட்ட தொழிலாளர்களில் ஒருவரான அகிலேஷ் சிங் கூறியுள்ளார்.


உத்தரகாசி பகுதியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் சில்க்யாரா  சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இது சார்தாம் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இங்கு பாதை அமைத்துக் கொண்டிருந்தபோதுதான், சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.




17 நாட்களாக மீட்பு குழுவினர் தீவிரமாக போராடி, நேற்று மாலை 41 தொழிலாளர்களை வெளியே கொண்டு வந்தனர். 57 மீட்டர் இரும்பு குழாய் வழியாக ஸ்டிரச்சர் வைத்து அதன் மூலம் மீட்கப்பட்டனர். தொழிலாளர்கள் வெளியே வரும்போது அவர்களுக்கு மாலை அணிவித்து ஆரவாரத்துடன் வரவேற்றனர்.


மீட்கப்பட்ட தொழிலாளி ஒருவர் கூறுகையில் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:


நான் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது திடீரென செல்லும் வழியில் மிகப்பெரும் சத்தத்துடன் சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது. இதனால் என் காதுகள் இரண்டும் மரத்துப்போனது. நாங்கள் சுரங்கப்பாதைக்குள்  சிக்கி கொண்டோம். 18 மணி நேரத்திற்கு மேலாக எங்களுக்கும், வெளி உலகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. 


நாங்கள் சிக்கிக் கொண்ட பிறகு, தண்ணீர் குழாயை திறந்து விட்டோம். தண்ணீர் வெளியே விழ ஆரம்பித்தது. அதன் மூலமாக உள்ளே தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர் என்பதை வெளியில் உள்ளவர்கள் உணர்ந்தார்கள். பின்பு இந்த குழாய் வழியாக எங்களுக்கு ஆக்சிஜன் அனுப்ப தொடங்கினர். இதனைத் தொடர்ந்து தினமும் எங்களுக்கு உணவும் அனுப்பினர்.


சுரங்கப் பாதைக்குள் இன்னும் 25 நாட்களுக்கு தேவையான அளவு உணவு உள்ளது. உடல் பரிசோதனை முழுவதும் முடிந்தது. நாங்கள் நலமாக இருக்கிறோம். அடுத்து என்ன செய்வது என்பது எனக்கு தெரியவில்லை. இப்போது நான் வீட்டிற்குச் சென்று ஒன்று இரண்டு மாதங்கள் ஓய்வு எடுக்கப் போகிறேன். இது ஒரு இயற்கை பேரழிவு. இதற்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது என அகிலேஷ் சிங் கூறினார்.


சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்