- மஞ்சுளா தேவி
உத்தரகாசி: சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்கள் நேற்று மாலை மீட்கப்பட்ட நிலையில், சுரங்கத்திற்குள் இன்னும் 25 நாட்களுக்கு தேவையான உணவு இருப்பதாக மீட்கப்பட்ட தொழிலாளர்களில் ஒருவரான அகிலேஷ் சிங் கூறியுள்ளார்.
உத்தரகாசி பகுதியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் சில்க்யாரா சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இது சார்தாம் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இங்கு பாதை அமைத்துக் கொண்டிருந்தபோதுதான், சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

17 நாட்களாக மீட்பு குழுவினர் தீவிரமாக போராடி, நேற்று மாலை 41 தொழிலாளர்களை வெளியே கொண்டு வந்தனர். 57 மீட்டர் இரும்பு குழாய் வழியாக ஸ்டிரச்சர் வைத்து அதன் மூலம் மீட்கப்பட்டனர். தொழிலாளர்கள் வெளியே வரும்போது அவர்களுக்கு மாலை அணிவித்து ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
மீட்கப்பட்ட தொழிலாளி ஒருவர் கூறுகையில் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:
நான் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது திடீரென செல்லும் வழியில் மிகப்பெரும் சத்தத்துடன் சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது. இதனால் என் காதுகள் இரண்டும் மரத்துப்போனது. நாங்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கி கொண்டோம். 18 மணி நேரத்திற்கு மேலாக எங்களுக்கும், வெளி உலகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
நாங்கள் சிக்கிக் கொண்ட பிறகு, தண்ணீர் குழாயை திறந்து விட்டோம். தண்ணீர் வெளியே விழ ஆரம்பித்தது. அதன் மூலமாக உள்ளே தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர் என்பதை வெளியில் உள்ளவர்கள் உணர்ந்தார்கள். பின்பு இந்த குழாய் வழியாக எங்களுக்கு ஆக்சிஜன் அனுப்ப தொடங்கினர். இதனைத் தொடர்ந்து தினமும் எங்களுக்கு உணவும் அனுப்பினர்.
சுரங்கப் பாதைக்குள் இன்னும் 25 நாட்களுக்கு தேவையான அளவு உணவு உள்ளது. உடல் பரிசோதனை முழுவதும் முடிந்தது. நாங்கள் நலமாக இருக்கிறோம். அடுத்து என்ன செய்வது என்பது எனக்கு தெரியவில்லை. இப்போது நான் வீட்டிற்குச் சென்று ஒன்று இரண்டு மாதங்கள் ஓய்வு எடுக்கப் போகிறேன். இது ஒரு இயற்கை பேரழிவு. இதற்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது என அகிலேஷ் சிங் கூறினார்.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}