சென்னை: திருப்பதி தேவஸ்தான சென்னை அலுவலகத்துடன் இணைந்து சென்னை ரோட்டரி கிளப் ஒரு சிறப்பான சுற்றுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி 1008 சிறப்புக் குழந்தைகளை சிறப்பு ரயில் மூலம் திருப்பதிக்கு அழைத்துச் செல்லவுள்ளனர்.
திருப்பதிக்கு சென்று சாமி கும்பிட்டு அந்த ஆன்மீக அனுபவத்தை பெற அனைவருமே விரும்புவார்கள். அப்படிப்பட்ட இறை அனுபவத்தை சிறப்புக் குழந்தைகளுக்கும் கொடுக்க ரோட்டரி கிளப் முடிவு செய்தது. இதையடுத்து சென்னையிலிருந்து சிறப்பு ரயில் மூலம் அவர்களை திருப்பதிக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய் வழி ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக 1008 சிறப்புக் குழந்தைகள் இந்த ஆன்மீக பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த பயணத்திற்கு சென்னை நோபள் ஹார்ட் ரோட்டரி கிளப் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்த சிறப்பு ஆன்மீக பயணத்தை மாநில இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நாளை காலை 7.10 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் தொடங்கி வைக்கிறார்.
சென்டிரல் ரயில் நிலையத்தின் 11வது பிளாட்பார்மில் நடைபெறும் இந்த விழாவில் ரோட்டரி இயக்குநர் அனிருத்தா ராய் செளத்ரி, தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாதன் ஈர்யா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
டி20 உலகக்கோப்பையில் திருப்பம்.. ‘புறக்கணிப்பு’ முடிவிலிருந்து பாகிஸ்தான் யூ-டர்ன்?
எழுந்தது முதல்.. இரவில் படுக்கையில் சாயும் வரை.. எங்கெங்கும் ஏஐ..!
Propse Day: காதலுக்கு முன்பு.. அன்பை வெளிப்படுத்துங்க.. அதை உணர்த்துங்க!
பொறுமையை சோதிக்கும் கூட்டணிக் கட்சிகள்.. அமைதியாக இருக்கும் திமுக.. என்ன நடக்கும்?
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்:பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ
தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது: ஜி.கே.வாசன் பேட்டி
ராமதாஸ் பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்...திருமாவளவன் உறுதி
கிச்சனில் இருக்கும்போது கவனம் தோழியரே.. எண்ணெய் தீ விபத்தை.. தடுப்பது எப்படி?
ஒரு வாரத்துக்கு நகைக் கடை பக்கமே போகாமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா!?
{{comments.comment}}