சென்னை: திருப்பதி தேவஸ்தான சென்னை அலுவலகத்துடன் இணைந்து சென்னை ரோட்டரி கிளப் ஒரு சிறப்பான சுற்றுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி 1008 சிறப்புக் குழந்தைகளை சிறப்பு ரயில் மூலம் திருப்பதிக்கு அழைத்துச் செல்லவுள்ளனர்.
திருப்பதிக்கு சென்று சாமி கும்பிட்டு அந்த ஆன்மீக அனுபவத்தை பெற அனைவருமே விரும்புவார்கள். அப்படிப்பட்ட இறை அனுபவத்தை சிறப்புக் குழந்தைகளுக்கும் கொடுக்க ரோட்டரி கிளப் முடிவு செய்தது. இதையடுத்து சென்னையிலிருந்து சிறப்பு ரயில் மூலம் அவர்களை திருப்பதிக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய் வழி ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக 1008 சிறப்புக் குழந்தைகள் இந்த ஆன்மீக பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த பயணத்திற்கு சென்னை நோபள் ஹார்ட் ரோட்டரி கிளப் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்த சிறப்பு ஆன்மீக பயணத்தை மாநில இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நாளை காலை 7.10 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் தொடங்கி வைக்கிறார்.
சென்டிரல் ரயில் நிலையத்தின் 11வது பிளாட்பார்மில் நடைபெறும் இந்த விழாவில் ரோட்டரி இயக்குநர் அனிருத்தா ராய் செளத்ரி, தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாதன் ஈர்யா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
காவியத் தாயின் இளைய மகன்.. காலத்தை வென்ற கண்ணதாசன்!
வஜ்ஜிரவல்லி பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா.. செரிமானத்திற்கு அவ்வளவு ஹெல்ப் பண்ணும்!
ரஜினியின் தலைவர் 173 பட டைட்டில் தர்மன்.. அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்!
மும்பைக்கு இன்று ரெட் அலர்ட்... வெளுத்து வாங்கும் கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!
சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி
முதல்வர் விஜய் சொன்ன 'பார்ட்டி ஃபண்ட்'...திமுக கொந்தளித்து வெளிநடப்பு செய்தது ஏன்?
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. செப்டம்பர் 15ல் தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு
மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை ஜூன் 25-ல் வெளியீடு: அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
{{comments.comment}}