ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு.. ரவுடியின் அட்டகாசம்!

Oct 25, 2023,04:36 PM IST
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடியை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து 3 பெட்ரோல் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் கருக்கா வினோத். அந்தப் பகுதியில் ரவுடித்தனம் செய்து வருபவர். இதுதொடர்பாக அவர் மீது பல்வேறு வழக்குகளும் உள்ளன. 

2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்தான் இந்த கருக்கா வினோத்.  கைது செய்யப்பட்ட வினோத்திடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது சம்பந்தப்பட்ட நேரத்தில் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. மேலும் நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக குண்டு வீசியதாக வினோத் வாக்குமூலம் அளித்தார்.



கைது செய்யப்பட்ட வினோத் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து சமீபத்தில்தான் அவர் விடுதலையாகி வெளியே வந்தார். இந்த நிலையில் இன்று டூவீலரில் கிண்டு வந்த அவர் ராஜ்பவன் வாசலுக்கு வந்து பெட்ரோல் குண்டுகளை எடுத்து வீச ஆரம்பித்தார். ஒரு குண்டு மட்டும் வெடித்து வாசலுக்கு முன்பே சிதறியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் விரைந்து வந்து வினோத்தை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் வெடிக்காத நிலையில் இருந்த 3 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட வினோத்திடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, நட் விலக்கு  மசோதாவில் ஆளுநர் கையெழுத்துப் போட மறுத்ததைக் கண்டித்தும், வேறு சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் பெட்ரோல் குண்டு வீசியதாக வினோத் கூறியுள்ளார்.

கருக்கா வினோத்தின் செயல் ராஜ்பவன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஆளுநர் மாளிகை மற்றும் வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்