ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு.. ரவுடியின் அட்டகாசம்!

Oct 25, 2023,04:36 PM IST
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடியை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து 3 பெட்ரோல் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் கருக்கா வினோத். அந்தப் பகுதியில் ரவுடித்தனம் செய்து வருபவர். இதுதொடர்பாக அவர் மீது பல்வேறு வழக்குகளும் உள்ளன. 

2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்தான் இந்த கருக்கா வினோத்.  கைது செய்யப்பட்ட வினோத்திடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது சம்பந்தப்பட்ட நேரத்தில் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. மேலும் நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக குண்டு வீசியதாக வினோத் வாக்குமூலம் அளித்தார்.



கைது செய்யப்பட்ட வினோத் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து சமீபத்தில்தான் அவர் விடுதலையாகி வெளியே வந்தார். இந்த நிலையில் இன்று டூவீலரில் கிண்டு வந்த அவர் ராஜ்பவன் வாசலுக்கு வந்து பெட்ரோல் குண்டுகளை எடுத்து வீச ஆரம்பித்தார். ஒரு குண்டு மட்டும் வெடித்து வாசலுக்கு முன்பே சிதறியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் விரைந்து வந்து வினோத்தை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் வெடிக்காத நிலையில் இருந்த 3 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட வினோத்திடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, நட் விலக்கு  மசோதாவில் ஆளுநர் கையெழுத்துப் போட மறுத்ததைக் கண்டித்தும், வேறு சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் பெட்ரோல் குண்டு வீசியதாக வினோத் கூறியுள்ளார்.

கருக்கா வினோத்தின் செயல் ராஜ்பவன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஆளுநர் மாளிகை மற்றும் வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்