ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு.. ரவுடியின் அட்டகாசம்!

Oct 25, 2023,04:36 PM IST
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடியை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து 3 பெட்ரோல் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் கருக்கா வினோத். அந்தப் பகுதியில் ரவுடித்தனம் செய்து வருபவர். இதுதொடர்பாக அவர் மீது பல்வேறு வழக்குகளும் உள்ளன. 

2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்தான் இந்த கருக்கா வினோத்.  கைது செய்யப்பட்ட வினோத்திடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது சம்பந்தப்பட்ட நேரத்தில் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. மேலும் நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக குண்டு வீசியதாக வினோத் வாக்குமூலம் அளித்தார்.



கைது செய்யப்பட்ட வினோத் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து சமீபத்தில்தான் அவர் விடுதலையாகி வெளியே வந்தார். இந்த நிலையில் இன்று டூவீலரில் கிண்டு வந்த அவர் ராஜ்பவன் வாசலுக்கு வந்து பெட்ரோல் குண்டுகளை எடுத்து வீச ஆரம்பித்தார். ஒரு குண்டு மட்டும் வெடித்து வாசலுக்கு முன்பே சிதறியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் விரைந்து வந்து வினோத்தை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் வெடிக்காத நிலையில் இருந்த 3 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட வினோத்திடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, நட் விலக்கு  மசோதாவில் ஆளுநர் கையெழுத்துப் போட மறுத்ததைக் கண்டித்தும், வேறு சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் பெட்ரோல் குண்டு வீசியதாக வினோத் கூறியுள்ளார்.

கருக்கா வினோத்தின் செயல் ராஜ்பவன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஆளுநர் மாளிகை மற்றும் வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

சுக்கிர பிரதோஷம்.. தேய்பிறை சுக்கிர பிரதோஷம் அதீத சிறப்புடையது!

news

ப்ளஸ் 1 பொதுத் தேர்வு... கணினி அறிவியல் பாடத்தில் கருணை மதிப்பெண் அறிவிப்பு!

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

Gold rate: எந்த மாற்றமும் இல்லை.. நேற்றைய நிலையிலேயே.. இன்றைய தங்கம் விலை!

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்