ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு.. ரவுடியின் அட்டகாசம்!

Oct 25, 2023,04:36 PM IST
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடியை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து 3 பெட்ரோல் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் கருக்கா வினோத். அந்தப் பகுதியில் ரவுடித்தனம் செய்து வருபவர். இதுதொடர்பாக அவர் மீது பல்வேறு வழக்குகளும் உள்ளன. 

2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்தான் இந்த கருக்கா வினோத்.  கைது செய்யப்பட்ட வினோத்திடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது சம்பந்தப்பட்ட நேரத்தில் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. மேலும் நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக குண்டு வீசியதாக வினோத் வாக்குமூலம் அளித்தார்.



கைது செய்யப்பட்ட வினோத் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து சமீபத்தில்தான் அவர் விடுதலையாகி வெளியே வந்தார். இந்த நிலையில் இன்று டூவீலரில் கிண்டு வந்த அவர் ராஜ்பவன் வாசலுக்கு வந்து பெட்ரோல் குண்டுகளை எடுத்து வீச ஆரம்பித்தார். ஒரு குண்டு மட்டும் வெடித்து வாசலுக்கு முன்பே சிதறியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸார் விரைந்து வந்து வினோத்தை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் வெடிக்காத நிலையில் இருந்த 3 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட வினோத்திடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, நட் விலக்கு  மசோதாவில் ஆளுநர் கையெழுத்துப் போட மறுத்ததைக் கண்டித்தும், வேறு சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் பெட்ரோல் குண்டு வீசியதாக வினோத் கூறியுள்ளார்.

கருக்கா வினோத்தின் செயல் ராஜ்பவன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஆளுநர் மாளிகை மற்றும் வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்