சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர ஊர்திகளுக்கு வழி விட மறுத்தால் ரூபாய் 10 ஆயிரம் அபதாரம் விதிக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் அவசர காலங்களில் பிற உயிர்களை காப்பாற்றுவதற்கு ஆம்புலன்ஸ் சேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஏழை எளிய பாமர மக்களுக்கு ஏதேனும் இடர் ஏற்படும் போது அவசர காலங்களில் மருத்துவமனைக்கு செல்வதற்கு ஏதுவான வசதி இல்லாமல் தவிப்பிற்குள்ளாகி வரும் நிலைமை ஏற்பட்டு வந்தது.
இதனை கருத்தில் கொண்டு அரசு ஆம்புலன்ஸ் சேவையை உருவாக்கியது. தற்போது தன்னார்வலர்களும் இந்த ஆம்புலன்ஸ் சேவையை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். மக்கள் எந்த இடத்தில் இருந்து கொண்டு எந்த நேரம் ஆனாலும் எமர்ஜென்சி காரணங்களால் அழைத்தாலும் ஆம்புலன்ஸ் சேவை இலவசமாக உதவிக்கரம் நீட்டி வருகிறது.
ஆம்புலன்ஸ்கள் அவசரமாக வரும்போது பல நேரங்களில் அதற்கு வழி விடாமல் சிலர் செல்வதையும் பார்க்க முடியும். இதையடுத்து தமிழ்நாட்டில் இதுபோல ஆம்புலன்ஸ்களுக்கு வழி விட மறுத்தால் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஹரியானா மாநிலம் குருகிராமத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் ஆகிய அவசர ஊர்திகளுக்கு வழி விட மறுத்தால் பத்தாயிரம் அபதாரம் விதிக்கப்படும் என அந்த மாநகரப் போக்குவரத்து ஆணையர் அறிப்பை வெளியிட்டுள்ளார். சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் வாயிலாக வீடியோ ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு விதியை மீறுபவர்களுக்கு ரசீது அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது. ஏனெனில் இன்று வரை பலர் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களுக்கு வழி விடாமல் இடையூறு செய்து வருகின்றனர். அவசர கால நேரத்தை கருத்தில் கொள்ளாமல் பல இது போன்ற செயல்களில் ஈடுபட்டும் வருகின்றனர். இதனை தடுக்க ஹரியானா மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் சூப்பராக இருக்கும்.
விஜய்யின் காஸ்ட்லி மிஸ்.. ஓபிஎஸ்ஸை தவற விட்டது எப்படி?.. திமுகவின் மின்னல் வேக ஸ்கெட்ச்!
காமெடி நடிகர் மதன்பாப் மரணம்.. புற்றுநோயால் உயிர் பிரிந்தது.. திரையுலகினர் அஞ்சலி
இந்தியப் பொருளாதாரம் எப்படி இருக்கு.. டிரம்ப்புக்கு நோஸ் கட் கொடுத்த .. அமெரிக்க ஏஐ தளங்கள்!
11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது என்று தெரியவில்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தந்தையை உளவு பார்த்த மகன்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டு வைத்த டாக்டர் ராமதாஸ்!
நலம் காக்கும் ஸ்டாலின்... சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு வைரமுத்து கோரிக்கை!
இன்று ஒரு கவிதை.. இனிமைத் தமிழ் மொழி எமது!
{{comments.comment}}