ஆயிரக்கணக்கில் வேலையை விட்டு விரட்டிட்டு.. சுந்தர் பிச்சைக்கு மட்டும்  சம்பளத்தைப் பார்த்தீங்களா?

Apr 22, 2023,03:53 PM IST
கலிபோர்னியா: ஆல்பாபெட் நிறுவன தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சைக்கு 2022ம் ஆண்டு மிகப் பெரியஅளவில் சம்பளம் கிடைத்துள்ளது. ஒரு நடுத்தர ஊழியருக்குக் கொடுக்கப்படும் சம்பளத்தை விட 800 மடங்கு அதிகமாகும்.

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனம்தான் ஆல்பாபெட். இதன் செயலதிகாரியாக இருப்பவர் சுந்தர் பிச்சை. இவருக்கான 2022ம் ஆண்டு சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.அதன்படி சுந்தர் பிச்சை 2022ம் ஆண்டு மொத்தமாக 1640 கோடியே 81 லட்சத்து 70 ஆயிரம் தொகையை சம்பளமாக பெற்றுள்ளார். 



கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள தனது கிளைகளில் மிகப் பெரிய அளவில் பணியாளர்களை நீக்கி வருகிறது. 12,000 பேரை வேலையை விட்டு நீக்குவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. கலிபோர்னியாவில் உள்ள தலைமை அலுவலகம், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் உள்ள அலுவலங்கள் என எல்லா இடத்திலும் ஆட்கள் நீக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சுந்தர் பிச்சைக்கு மிகப் பெரிய சம்பளம் தரப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பளப் பிரச்சினை, வேலை நீக்கம் உள்ளிட்டவற்றைக் கண்டித்து கடந்த மாதம் லண்டனில் உள்ள கூகுள் நிறுவனப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கில் வெளியேறினார்கள் என்பது நினைவிருக்கலாம். அதேபோல ஜூரிச் நகரில் உள்ள 200 பணியாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்த இதர பணியாளர்கள் வெளியேறினர். இந்த நிலையில் சுந்தர் பிச்சை சம்பளம் குறித்த தகவல் மேலும் சலசலப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!

news

"திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்!" – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

news

ஃபைலை திறக்க ஜோசியக்காரர் சொல்லணுமா? உதயநிதி காரசார பேச்சு

news

எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்

news

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

news

ஏ டி எம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? நேரில் செயல் விளக்கம் பெற்ற மாணவர்கள்!

news

டெல்லியில் டிஜிபி அலுவலகம் முன்பு ராகுல் காந்தி திடீர் தர்ணா போராட்டம்

news

Varalakshmi Nonbu: வரலட்சுமி பூஜை ஏன் செய்யப்படுகிறது?

news

சிந்தனைச் சிதறல்: எந்த ஒன்றையும் உதாசீனப்படுத்தி விடாதீர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்