ஆதாருடன்.. பான் எண்ணை இணைக்காதவர்களிடமிருந்து.. ரூ. 600 கோடி அபராதம் வசூல்!

Feb 06, 2024,04:09 PM IST

புதுடில்லி: ஆதார் எண்ணுடன் பான் எண்ணை குறிப்பிட்ட காலத்திற்குள் இணைக்கத் தவறியவர்களிடம் இருந்து ரூ.600 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. வருமான வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கில் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.இந்த அறிவிப்பு வந்த பின்னரும் ஏராளமானோர் இணைக்காமல் இருந்தனர். அவர்களுக்கு மீண்டும் குறிப்பிட்ட காலக் கெடு கொடுத்து இணைக்க வாய்ப்பளித்தது மத்திய அரசு. 


குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது. இதன் பிறகு பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. 




அதன் பின்னர் கொரோனா தொற்று பரவியதால் மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க 2023 ஜூன் 30ம் தேதி என அறிவித்திருந்தது மத்திய அரசு. இதற்கு மேல் இணைக்காதவர்களின் பான் எண் செயலற்றதாகிவிடும் எனவும் அறிவித்தது. 


அதன் பின்னர், ஆதார் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு முதலில் ரூ.500 அபராதம் விதித்தது. அதன் பிறகு காலக்கெடுவிற்கு பிறகு இணைப்பவர்கள் ரூ.1000 அபராத தொகையை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த காலக்கெடுவுக்கு பின்னரும் ஒரு நபர் பான் மற்றும் ஆதாரை இணைக்க தவறினால் அவரின் பான் அட்டை செயலிழந்து விடும். செயலிழந்த பான் அட்டையை பயன்படுத்த ரூ.10,000 அபராதம் வரை செலுத்த வேண்டியிருக்கும் என வருமானவரித்துறை எச்சரித்தது.


இதன்படி அபராத தொகையை செலுத்தி பான் எண்ணை புதிப்பித்தவர்கள் செலுத்திய தொகை ரூ.601.97 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக லோக்சபாவில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், கடந்த ஜனவரி 29ம் தேதி நிலவரப்படி, ஆதாருடன் பான் எண்ணை இதுவரை 11.48 கோடி பேர் இணைக்கவில்லை. ரூ.1000 அபராதம் செலுத்தி தாமதமாக பலர் இணைத்துள்ளனர். கடந்த ஜனவரி 31ம் தேதி நிலவரப்படி ரூ.601.97 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்