சென்னை: சென்னை, திருச்சி , ராமேஸ்வரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட பயணம் தனிப்பட்ட முறையிலானதா? அல்லது அலுவல் ரீதியானதா? என தகவல் உரிமைச் சட்டத்தில் கீழ் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ் துரைசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் தமிழகத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தின் போது முதல் நாளில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. அடுத்த நாள் திருச்சிக்கு சென்று ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்தார். அதன் பின்னர் மறுநாள் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று அக்னி தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்து, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு புனிதர் நீர் எடுத்துக்கொண்டார்.
பிறகு 21ம் தேதி அரிச்சல் முனை கடற்கரைக்கு சென்ற பிரதமர் மோடி தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராமர் கோவிலில் சாமிதரிசனம் செய்தார். பிறகு அங்கிருந்து மதுரை வந்து, அங்கிருந்து டெல்லி சென்றார்.
இந்நிலையில் பிரதமர் மேற்கொண்ட தமிழக பயணம் குறித்து மூத்த வழக்கறிஞர் துரைச்சாமி பல்வேறு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை, திருச்சி , ராமேஸ்வரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் தனிப்பட்ட முறையிலானதா? அல்லது அலுவலக ரீதியானதா? அவருடைய பயணச் செலவை ஏற்றது யார் உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி தகவல் உரிமை ச் சட்டத்தில் கீழ் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ் துரைசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}