Britain: 14 ஆண்டு கால ஆட்சியைப் பறி கொடுத்தது கன்சர்வேட்டிவ் கட்சி.. ரிஷி சுனாக் பதவி போச்சு!

Jul 05, 2024,10:26 PM IST

லண்டன் :  நடந்து முடிந்த பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி படு தோல்வி அடைந்துள்ளது. தங்கள் கட்சி பெற்ற தோல்விக்காக பிரதமர் ரிஷி சுனாக் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த 14 வருடமாக  கன்சர்வேட்டிவ்கட்சி ஆட்சி பீடத்தில் இருந்து வந்தது. அந்த ஆட்சியை இப்போது முடித்து வைத்து விட்டது லேபர் கட்சி. 


இதுவரை வந்த முடிவுகள் விவரம்:

பெரும்பான்மைக்குத் தேவை - 326

தொழிலாளர் கட்சி - 408

கன்சர்வேட்டிவ் கட்சி - 113

லிபரல் டெமாக்கிரட்ஸ் - 69

எஸ்என்பி - 8

ஸ்காட்டிஷ் தேசிய கட்சி  - 8

சீன் பின் - 7

மற்றவர்கள் - 26





லேபர் அல்லது தொழிலாளர் கட்சி மிகப் பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றுள்ளது. அந்தக் கட்சியின் தலைவரான கியர் ஸ்டார்மர் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக பதவியேற்கவுள்ளார்.


பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிங் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  தொழிலாளர் கட்சிக்கு 410 இடங்களும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 131 இடங்களும், லிபரல் டெமாக்ராட்ஸூக்கு 61 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சி கணித்ததை விட குறைவாக அதாவது 113 இடங்களில் மட்டுமே வென்று மண்ணைக் கவ்வியுள்ளது.


இதனால் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டது. இவர்தான் இங்கிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து ஆட்சியை தொழிலாளர் கட்சி மீண்டும் பிடித்துள்ளது. அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது லேபர் எனப்படும் தொழிலாளர் கட்சி.




2010ம் ஆண்டு முதல் 14 வருட காலம் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்தது கன்சர்வேட்டிவ் கட்சி. ரிஷி சுனாக் தலைமையிலான அரசு மீது கடும் அதிருப்தி அலை வீசியதால் தேர்தலில் படு தோல்வி அடைந்துள்ளது. தேர்தல் தோல்வியை தொடர்ந்து ரிச்மண்ட் மற்றும் வடக்கு ஆலர்டன் பகுதியில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய ரிஷி சுனக், தேர்தலில் பெற்ற தோல்விக்காக மன்னிப்பு கேட்டதுடன், தோல்விக்கு தானே பொறுப்பேற்றதாகவும் தெரிவித்துள்ளார். 


ரிஷி சுனக் பதவி இழந்ததை அடுத்து, தொழிலாளர் கட்சியின் தலைவர் ஸ்டார்மர், பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த தேர்தலில் ஸ்டார்மர் 18,884 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம் 2019ம் ஆண்டு இவர் பெற்ற 22,766 ஓட்டுக்களுடன் ஒப்பிடுகையில் இந்த முறை இவர் பெற்ற ஓட்டு விகிதம் குறைந்துள்ளது. இருந்தாலும் தங்கள் கட்சிக்காக ஓட்டளித்த ஒவ்வொருவருக்காகவும் தான் உழைக்க போவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்

news

ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?

news

IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

news

Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

news

தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா

news

இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்

news

ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்