மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடினைச் சுற்றிலும் ஏகப்பட்ட டென்ஷன்கள், பதட்டங்கள், பரபரப்புகள் சூழ்ந்து கிடந்தாலும் மனிதர் ரொமான்ஸிலும் முழுக் கவனத்துடன் இருக்கிறார் போலும்.. 71 வயதாகும் அவர் 39 வயதாகும் பெண்ணுடன் புதிய காதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின், அதிபர் பதவிக்கு வருவதற்கு முன்பு ஒரு காலத்தில் ரகசிய உளவு ஏஜென்டாக இருந்தவர். பதவிக்கு வந்தது முதல் அவர் குறித்து ஏதாவது சர்ச்சை வந்து கொண்டேதான் இருக்கிறது. அதில் முக்கியமானது.. அவரது பெண் தொடர்புகள் குறித்த விவரங்கள்.
சட்டையை மாற்றுவது போல மனிதர் அவ்வப்போது தனது காதலியையும் மாற்றிக் கொண்டே இருப்பார் போல. அவரது நீண்ட நாள் காதலியாக இருந்து வருபவர் அலினா கபயேவா. இந்த நிலையில் தற்போது ஏகதரினா காத்யா மிஸுலினா என்ற 39 வயதுப் பெண்ணை புடின் காதலித்து வருவதாக ஒரு புதுத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏகதரினா லண்டனில் படித்தவர், வரலாற்று ஆய்வாளர். இவரை செல்லமாக பார்பி கேர்ள் என்றுதான் சொல்கிறார்கள். தற்போது இவர் ரஷ்ய அரசின் பாதுகாப்பான இன்டர்நெட்கமிட்டியின் தலைவராக இருக்கிறார். இவரது தலைமையிலான குழுதான் ரஷ்யாவில் இன்டர்நெட் தணிக்கையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இவர் உக்ரைனுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிப்பவர். தீவிர புடின் ஆதரவாளரும் கூட. அவரது நம்பிக்கையைப் பெற்ற விசுவாசியும் கூட. இவரது தாயார் பெயர் எலினா மிஸுலினா. 69 வயதாகும் இவர் செனட் உறுப்பினர். இவரும் தீவிர புடின் விசுவாசிதான்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் 2004ம் ஆண்டு படித்தவர் மிஸுலினா. வரலாற்றில் பட்டம் பெற்ற இவர், இந்தோனேசிய மொழி குறித்த ஆய்வையும் மேற்கொண்டவர். சீனா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் ரஷ்ய குழுக்களுடன் மொழி பெயர்ப்பாளராக பயணித்துள்ளார். இவரது தந்தை மிக்கைல் மிஸுலின் கல்வியாளர் ஆவார். இவருக்கும் 69 வயதாகிறது. அதாவது புடினை விட மிஸுலினாவின் பெற்றோர் வயது குறைந்தவர்கள்.

கூகுளையும், விக்கி பீடியாவையும் சுத்தப்படுத்த வேண்டும் என்று அடிக்கடி கூறுவார் மிஸுலினா. முதலில் உக்ரைனை சுத்தப்படுத்துவோம். அதன் பிறகு கூகுள், விக்கிபீடியாவைக் களையெடுக்க வேண்டும் என்று அவர் அடிக்கடி சொல்வார்.
தற்போது மிஸுலினாவும், புடினும் நெருங்கிப் பழகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. ரஷ்யாவைச் சேர்ந்த உள்ளூர் மீடியாக்களும் கூட இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளன.
ரணகளத்திலும் புடின் ஜாலியாத்தான் இருக்காரு போல!
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}