மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடினைச் சுற்றிலும் ஏகப்பட்ட டென்ஷன்கள், பதட்டங்கள், பரபரப்புகள் சூழ்ந்து கிடந்தாலும் மனிதர் ரொமான்ஸிலும் முழுக் கவனத்துடன் இருக்கிறார் போலும்.. 71 வயதாகும் அவர் 39 வயதாகும் பெண்ணுடன் புதிய காதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின், அதிபர் பதவிக்கு வருவதற்கு முன்பு ஒரு காலத்தில் ரகசிய உளவு ஏஜென்டாக இருந்தவர். பதவிக்கு வந்தது முதல் அவர் குறித்து ஏதாவது சர்ச்சை வந்து கொண்டேதான் இருக்கிறது. அதில் முக்கியமானது.. அவரது பெண் தொடர்புகள் குறித்த விவரங்கள்.
சட்டையை மாற்றுவது போல மனிதர் அவ்வப்போது தனது காதலியையும் மாற்றிக் கொண்டே இருப்பார் போல. அவரது நீண்ட நாள் காதலியாக இருந்து வருபவர் அலினா கபயேவா. இந்த நிலையில் தற்போது ஏகதரினா காத்யா மிஸுலினா என்ற 39 வயதுப் பெண்ணை புடின் காதலித்து வருவதாக ஒரு புதுத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏகதரினா லண்டனில் படித்தவர், வரலாற்று ஆய்வாளர். இவரை செல்லமாக பார்பி கேர்ள் என்றுதான் சொல்கிறார்கள். தற்போது இவர் ரஷ்ய அரசின் பாதுகாப்பான இன்டர்நெட்கமிட்டியின் தலைவராக இருக்கிறார். இவரது தலைமையிலான குழுதான் ரஷ்யாவில் இன்டர்நெட் தணிக்கையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இவர் உக்ரைனுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிப்பவர். தீவிர புடின் ஆதரவாளரும் கூட. அவரது நம்பிக்கையைப் பெற்ற விசுவாசியும் கூட. இவரது தாயார் பெயர் எலினா மிஸுலினா. 69 வயதாகும் இவர் செனட் உறுப்பினர். இவரும் தீவிர புடின் விசுவாசிதான்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் 2004ம் ஆண்டு படித்தவர் மிஸுலினா. வரலாற்றில் பட்டம் பெற்ற இவர், இந்தோனேசிய மொழி குறித்த ஆய்வையும் மேற்கொண்டவர். சீனா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் ரஷ்ய குழுக்களுடன் மொழி பெயர்ப்பாளராக பயணித்துள்ளார். இவரது தந்தை மிக்கைல் மிஸுலின் கல்வியாளர் ஆவார். இவருக்கும் 69 வயதாகிறது. அதாவது புடினை விட மிஸுலினாவின் பெற்றோர் வயது குறைந்தவர்கள்.

கூகுளையும், விக்கி பீடியாவையும் சுத்தப்படுத்த வேண்டும் என்று அடிக்கடி கூறுவார் மிஸுலினா. முதலில் உக்ரைனை சுத்தப்படுத்துவோம். அதன் பிறகு கூகுள், விக்கிபீடியாவைக் களையெடுக்க வேண்டும் என்று அவர் அடிக்கடி சொல்வார்.
தற்போது மிஸுலினாவும், புடினும் நெருங்கிப் பழகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. ரஷ்யாவைச் சேர்ந்த உள்ளூர் மீடியாக்களும் கூட இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளன.
ரணகளத்திலும் புடின் ஜாலியாத்தான் இருக்காரு போல!
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}