டெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடியை திங்களன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
பஹல்கம் தீவிரவாத தாக்குதலை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்ததற்கு புடின் இரங்கல் தெரிவித்தார். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போருக்கு தனது முழு ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார். இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இரு தலைவர்களுக்கிடையேயான உரையாடல் குறித்த விவரங்களை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: மே 9 அன்று கொண்டாடப்படும் ரஷ்யாவின் வெற்றி தினத்தின் 80வது ஆண்டு விழாவிற்கு புடினுக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள வருடாந்திர உச்சி மாநாட்டிற்கு அவரை அழைப்பு விடுத்தார்.
பஹல்கம் தாக்குதலுக்கு பிறகு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் ரஷ்யாவின் ஆதரவு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. பஹல்கம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகளே காரணம் என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று இந்தியா உறுதி அளித்துள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. அட்டாரி நில எல்லை வழியாக நடைபெறும் போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியது. பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை விதித்துள்ளது.
சமீபத்தில் நடந்த உயர் மட்ட கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார். பஹல்கம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இலக்கை தேர்ந்தெடுத்து, தாக்குதல் நடத்துவதற்கான நேரம் மற்றும் முறையை ராணுவமே முடிவு செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான் ஆகியோருடன் பிரதமர் மோடி தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் ராணுவத்திற்கு இந்த உத்தரவை பிறப்பித்தார்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. நமது ராணுவத்தின் திறமை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். இந்த நிலையில்தான் ரஷ்ய அதிபர் புடின், பஹல்கம் தாக்குதலை கண்டித்து பிரதமர் மோடியிடம் பேசியது, இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆதரவாக கருதப்படுகிறது. இந்த ஆதரவு இந்தியாவுக்கு மேலும் நம்பிக்கையை அளித்துள்ளது.
இந்தியாவுக்கு ரஷ்யா எப்போதும் துணை நிற்கும். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்றும் புடின் உறுதியளித்துள்ளார்.
பஹல்கம் தீவிரவாத தாக்குதல்.. பிரதமர் மோடியுடன் அதிபர் புடின் பேச்சு.. இந்தியாவுக்கு ஆதரவு!
சபரிமலை செல்கிறார் குடியரசுத் தலைவர் முர்மு.. ஐயப்பனை தரிசிக்கப்போகும் முதல் ஜனாதிபதி!
செனாப் நதியின் 2 அணைகளிலிருந்து.. பாகிஸ்தான் செல்லும் தண்ணீரை.. நிறுத்தி வைத்தது இந்தியா
Gold rate: தங்கம் விலை ஸ்திரமற்றதாக இருக்கும்.. முதலீட்டாளர்கள் கவனமாக இருக்கவும்..!
குளத்தில் வட்ட இலையுடன் தாமரை மலரும்.. ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும்: தமிழிசை சௌந்தரராஜன்
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. காயத்தால் அவதிப்படும் பும்ரா.. புது வைஸ் கேப்டனாக வரப் போவது யாரு?
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சிறைகளைத் தாக்க தீவிரவாதிகள் திட்டம்?.. பாதுகாப்பு அதிகரிப்பு!
வேற லெவல் சாட்ஜிபிடி.. ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி.. ஏ+ மார்க் வாங்கி அசத்திய ஆய்வு மாணவர்!
Cheating case: 78 வயது மூதாட்டியிடம் மோசடி.. 21 வயது இந்திய மாணவர் அமெரிக்காவில் கைது!
{{comments.comment}}