- சு.கருப்பையா
கொடுத்தே பழகிய மரங்கள்
பெறுவதற்குப் பழகவில்லை.
தன்னிடம் நிழல் பெறுவோர்
அடையும் ஆனந்தத்தைத் தானும்
அடைய வேண்டுமே என்கிற ஒரு ஏக்கம்.
ஐந்து பருவங்கள் நிழல் தந்த
மரத்திற்கும் கோடைக் காலத்தில்
அன்பு என்கிற நிழல் தேவை.

தான் பெற்ற பிள்ளைகளிடம்
தனிமை என்னும் வெயிலில் இருந்து
தப்பிக்க நிழல் தேடுகிறார்கள்
பெற்றோர்கள்......
கொடுத்தவருக்குத் திருப்பிக் கொடுப்பதுதானே முறை.
பிள்ளைகளே நிழல் கொடுங்கள்,
உங்களுக்குக் கொடுத்த பெற்றோருக்கு........
(கவிஞர் தீபா ரவி தலைமையிலான கவித்துளி வழங்கிய சிறப்புக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. கவிஞர் சு. கருப்பையா, விராலிமலை, புதுக்கோட்டை மாவட்டம்)
என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போமே..!
தனியாளாய் ஒரு தீபம்!
மகிழ்ச்சி
இமாலய வெற்றியை நோக்கி...தமிழக தேர்தல் களம் குறித்து அண்ணாமலை அதிரடி கணிப்பு
சிந்திப்போம்.. மனிதன் ஏன் இன்னொரு மனிதனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வேண்டும்?
நிழல் தேடும் மரங்கள்!
பயிற்சி வகுப்பு கட்.. விஷாலின் விளையாட்டுகள் 9
Happiness: மனமகிழ்ச்சி தருவது தனிமையா? உறவுகளா?
பெண் வேட்பாளர்களே இல்லாத தமிழகத்தின் 46 தொகுதிகள்
{{comments.comment}}