நிழல் தேடும் மரங்கள்!

Apr 13, 2026,11:54 AM IST

- சு.கருப்பையா


கொடுத்தே பழகிய மரங்கள் 

பெறுவதற்குப் பழகவில்லை.


தன்னிடம் நிழல் பெறுவோர்

அடையும் ஆனந்தத்தைத் தானும் 

அடைய வேண்டுமே என்கிற ஒரு ஏக்கம்.


ஐந்து பருவங்கள் நிழல் தந்த 

மரத்திற்கும் கோடைக் காலத்தில் 

அன்பு என்கிற நிழல் தேவை.




தான் பெற்ற பிள்ளைகளிடம் 

தனிமை என்னும் வெயிலில் இருந்து

தப்பிக்க நிழல் தேடுகிறார்கள் 

பெற்றோர்கள்......


கொடுத்தவருக்குத் திருப்பிக் கொடுப்பதுதானே முறை.

பிள்ளைகளே நிழல் கொடுங்கள்,

உங்களுக்குக் கொடுத்த பெற்றோருக்கு........


(கவிஞர் தீபா ரவி தலைமையிலான கவித்துளி வழங்கிய சிறப்புக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. கவிஞர் சு. கருப்பையா, விராலிமலை, புதுக்கோட்டை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?

news

கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!

news

முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு

news

அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!

news

"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!

news

Tamil Short Story: கௌரவம் சிறுகதை (சென்ற வார தொடர்ச்சி)... எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர்!

news

முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!

news

Sasikala Viswanathan Haiku: நிலவு ஒளிர்கிறது!

news

My mother stood through every pain... தாயின் தியாகங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்