- கவிஞர் சகாய தேவி
சொல் எனப்படுவது சொல்லுதல் எனும் விந்தையான வித்தைக்காரன்..
சொல் இனிய மயிலிறகாய்
சில நேரங்களில்
மனதை வருடி செல்லும்!
சொல் இராவு பூதமாய்
சில நேரங்களில்
நிம்மதியை திருடி செல்லும்!
சில நேரங்களில்
ஆறாத காயங்களை
ஓயாத அலைகள் போல
ஏற்படுத்தி செல்லும் அசுரன்!
தீராத உற்சாகங்களை
உதயமாகும் சூரியனைப் போல
உதிரத்திற்குள் எழுப்பி செல்லும்
அற்புத வித்தைக்காரன் அவன்!

நிலவினும் குளிர்ச்சொல் கொஞ்சி
எப்பொழுதும் பேசிட இயலுமோ?
நிழலிலும் சூரியனாக சுட்டெரிக்கவும் தெரிந்திட வேண்டுமே
கயவனின் கண்கள் காண்கையில் கருணையாய் பேசுதலை விட
கனலாய் சீறுவதே நன் நெறி ..
அநீதியை கண்டு பாரதியைப் போல்
அக்கறையோடு புரட்சிகள் பேசிட
புது பாரதிகள் புவியினில் வேண்டுமே ...
குடும்பத்திலும் கால சூழ்நிலை மனம் அறிந்து கதைக்க வேண்டுமே...
உறவுகள் இனித்திட
இட்லியோடு சேரும் சட்னியாய்
இனிய சொற்கள் சேர்த்திடு அனுதினமே ..
யோசித்து பின் யோசித்து சொற்களைக் கொட்டிய பின்
மனம் கலங்குவதை விட
சொற்களை சிதற விடும் முன் சிந்தித்து சொல்லலாமே...
யாதும் ஊரே யாவரும் கேளிர்
அறிந்தவனிடமும் அறியாதவனிடமும்
அன்பை அனுசரணையை சுமக்கும் சொற்களை
நற்சொல் நல்லன மட்டும் பேசுவதல்ல
நன்கு சிந்தித்த பின் பேசுதலுமாகுமே
(கவிஞர் சகாய தேவி சகாய சாரல்கள், சென்னை)
Rathi's Kitchen: நாக்கு சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும்.. நார்ச் சத்து மிகுந்த துவையல்!
கனவுகள் மெய்ப்படும்!
Wonder Words: ஏன்.. எப்படி .. எதற்கு?.. விந்தையான வார்த்தைகள்!
பலவண்ணம்!
எதிர்பாராமல் கிடைத்த உதவிக்கு என்றுமே கடமைப்படு!
Thangalakshmi Short Story: உண்மை என்பது இவ்வுலகில் இல்லை
காரைக்குடியில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்...ஸ்தம்பித்த சாலைகள்
இணையத்தில் கசிந்த விஜய்யின் 'ஜனநாயகன்' சீன்ஸ்...ரசிகர்கள் கொதிப்பு
ஜனநாயகன் திரைப்படத்திற்காக முதல் ஆளாக குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்
{{comments.comment}}