மும்பை: நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்திய சம்பவத்தில் கிட்டத்தட்ட 70 மணி நேர தேடுதலுக்குப் பின்னர் முகம்மது சரிபுல் இஸ்லாம் செசியாத் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். மும்பை அருகே உள்ள தானேவில் வைத்து இந்த நபர் பிடிபட்டார். இவர் வங்கதேசத்து நாட்டுக்காரர் என்று தற்போது தெரிய வந்துள்ளது.
சைப் அலிகான் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அவரை சரமாரியாக குத்திக் காயப்படுத்தி விட்டு தப்பிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தனிப்படைகளை அமைத்து மும்பை போலீஸார் தீவிரமாக குற்றவாளியைத் தேடி வந்தனர். முதலில் பந்த்ரா ரயில் நிலையம் அருகே ஒருவர் பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் அவருக்கு இதில் தொடர்பில்லை என்று தெரிய வந்தது. அடுத்து கொல்கத்தா செல்லும் ரயிலில் ஒருவர் சிக்கியதாக தகவல்கள் வெளியாகின. அதுவும் பின்னர் தவறானதாக தெரிய வந்தது.
இந்த நிலையில் தற்போது தானே அருகில் ஒரு நபர் சிக்கியுள்ளார். இவர்தான் குற்றவாளி என்று தற்போது போலீஸார் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். இவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

- பிடிபட்ட நபரின் பெயர் முகம்மது சரிபுல் இஸ்லாம் செசியாத். வங்கதேசத்திலிருந்து சில மாதங்களுக்கு முன்பு சட்டவிரோதமாக மும்பைக்குள் ஊடுறுவியுள்ளார்.
- முகம்மது சரிபுல் இஸ்லாமிடம் முறையான பாஸ்போர்ட் உள்ளிட்ட எதுவுமே இல்லை. அவர் மீது போலீஸார் பாஸ்போர்ட் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- திருடும் நோக்கத்துடன் சைப் அலிகான் வீட்டுக்குள் இந்த நபர் புகுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. தனது பெயரை பிஜோய் தாஸ் என்று மாற்றிக் கொண்டு கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு இடங்களில் தங்கி வந்துள்ளார் இவர். ஒரு ஹவுஸ்கீப்பிங் ஏஜென்சியிலும் சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார். திருடுவது இவரது தொழிலாக இருந்துள்ளது.
- சைப் அலிகான் வீட்டின் தீ விபத்து ஏற்பட்டால் வெளியேறும் அவசரப் பாதை வழியாக புகுந்து வீட்டுக்குள் நுழைந்துள்ளார். வீட்டு வேலைக்காரப் பெண் பார்த்து சத்தம் போட்டதைத் தொடர்ந்து சைப் அலிகான் ஓடி வந்துள்ளார். திருடனை சைப் அலிகான் தடுக்க முயன்றபோது அவர் சைப் அலிகானை 6 முறை கத்தியால் படபடவென குத்தி விட்டுத் தப்பி விட்டார்.
- முதலில் பணம் கேட்டு மிரட்டியுள்ளார் சரிபுல். ஆனால் வேலைக்காரப் பெண் ஜூனுவும், சைப் அலிகானும் மறுத்து அவரைப் பிடிக்க முயன்றபோதுதான், அந்த நபர் சைப் அலிகானைத் தாக்கி விட்டார்.
தொடர்ந்து கைதான நபரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில்தான் முழுவிவரமும் வெளியாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு
இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி
சந்தோஷம்!
{{comments.comment}}