சைப் அலிகானை கத்தியால் குத்திய நபர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்.. வெளியான பரபரப்பு தகவல்கள்!

Jan 19, 2025,11:10 AM IST

மும்பை: நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்திய சம்பவத்தில் கிட்டத்தட்ட 70 மணி நேர தேடுதலுக்குப் பின்னர் முகம்மது சரிபுல் இஸ்லாம் செசியாத் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். மும்பை அருகே உள்ள தானேவில் வைத்து இந்த நபர் பிடிபட்டார். இவர் வங்கதேசத்து நாட்டுக்காரர் என்று தற்போது தெரிய வந்துள்ளது.


சைப் அலிகான் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அவரை சரமாரியாக குத்திக் காயப்படுத்தி விட்டு தப்பிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தனிப்படைகளை அமைத்து மும்பை போலீஸார் தீவிரமாக குற்றவாளியைத் தேடி வந்தனர். முதலில் பந்த்ரா ரயில் நிலையம் அருகே ஒருவர் பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் அவருக்கு இதில் தொடர்பில்லை என்று தெரிய வந்தது. அடுத்து கொல்கத்தா செல்லும் ரயிலில் ஒருவர் சிக்கியதாக தகவல்கள் வெளியாகின. அதுவும் பின்னர் தவறானதாக தெரிய வந்தது.


இந்த நிலையில் தற்போது தானே அருகில் ஒரு நபர் சிக்கியுள்ளார். இவர்தான் குற்றவாளி என்று தற்போது போலீஸார் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். இவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




- பிடிபட்ட நபரின் பெயர் முகம்மது சரிபுல் இஸ்லாம் செசியாத். வங்கதேசத்திலிருந்து சில மாதங்களுக்கு முன்பு சட்டவிரோதமாக மும்பைக்குள் ஊடுறுவியுள்ளார்.


- முகம்மது சரிபுல் இஸ்லாமிடம் முறையான பாஸ்போர்ட் உள்ளிட்ட எதுவுமே இல்லை. அவர் மீது போலீஸார் பாஸ்போர்ட் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


- திருடும் நோக்கத்துடன் சைப் அலிகான் வீட்டுக்குள் இந்த நபர் புகுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. தனது பெயரை பிஜோய் தாஸ் என்று மாற்றிக் கொண்டு கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு இடங்களில் தங்கி வந்துள்ளார் இவர். ஒரு ஹவுஸ்கீப்பிங் ஏஜென்சியிலும் சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார். திருடுவது இவரது தொழிலாக இருந்துள்ளது.


- சைப் அலிகான் வீட்டின் தீ விபத்து ஏற்பட்டால் வெளியேறும் அவசரப் பாதை வழியாக புகுந்து வீட்டுக்குள் நுழைந்துள்ளார். வீட்டு வேலைக்காரப் பெண் பார்த்து சத்தம் போட்டதைத் தொடர்ந்து சைப் அலிகான் ஓடி வந்துள்ளார். திருடனை சைப் அலிகான் தடுக்க முயன்றபோது அவர் சைப் அலிகானை 6 முறை கத்தியால் படபடவென குத்தி விட்டுத் தப்பி விட்டார்.


- முதலில் பணம் கேட்டு மிரட்டியுள்ளார் சரிபுல். ஆனால் வேலைக்காரப் பெண் ஜூனுவும், சைப் அலிகானும் மறுத்து அவரைப் பிடிக்க முயன்றபோதுதான், அந்த நபர் சைப் அலிகானைத் தாக்கி விட்டார்.


தொடர்ந்து கைதான நபரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில்தான் முழுவிவரமும் வெளியாகும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்