சேலத்து மகாராணி.. கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா.. களை கட்டிக் காணப்படும் சேலம்!

Aug 05, 2025,12:45 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சேலம் கோட்டை மாரியம்மன் பண்டிகை சேலத்து மகாராணி கோட்டை  மாரியம்மனுக்கு  ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கோலாகலமாக பண்டிகை நடத்தப்படுகிறது.


சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா சேலத்தில் மிகவும் பிரபலமான திருவிழாக்களில் ஒன்று ஆகும் .இது ஒரு வாரத்திற்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


ஆகஸ்ட் ஆறாம் தேதி ஆடி மாதம் 21ஆம் நாள் புதன்கிழமை சேலம் மாநகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள மாரியம்மன் கோவில்களில் மாரியம்மன் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கோட்டை மாரியம்மன்  திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி உள்ளூர் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆடிப் பண்டிகை அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கும் .சேலத்தில் உள்ள மற்ற அனைத்து மாரியம்மன் கோவில் களுக்கும் கோட்டை மாரியம்மன் கோயிலில் இருந்தே பூ எடுத்துச் செல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கம்பம் நடுதல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.




ஆடிப் பண்டிகையின் கொண்டாட்டங்களில் சேலத்தைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்வர். மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் ,அபிஷேகங்கள்  அலங்காரங்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு வகையான கலாச்சார நிகழ்வுகள் ஊர்வலங்கள் என ஊரே திருவிழா கோலமாக காணப்படும்.


வீடுகளில் ஆடி செவ்வாய் கிழமையான இன்று  கலசம் வைத்து கலசத்தில் நீர் ஊற்றி ,தேங்காய், வேப்பிலை ,மலர்கள் வைத்து கத்தரிக்காய்- மொச்சை சேர்த்து குழம்பு வைத்து ,முருங்கைக்கீரை சமைத்து ,பூரண கொழுக்கட்டை செய்து, பச்சரிசி மாவினால் தீபம் போன்ற கொழுக்கட்டையும் செய்து ,அதில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ,வாழை இலையில் சாதம் ,குழம்பும் , முருங்கைக்கீரை, கொழுக்கட்டை இவற்றை அம்மனுக்கு படைத்து பூஜை செய்து ,கும்பம் ஊற்றுதல் எனப்படும் கும்ப பூஜை வழிபாடு பல வீடுகளில் கடைப்பிடிப்பார்கள். படைத்த சாதத்தை கலந்து கும்ப சோறு என்று அனைவரும் பகிர்ந்து  உண்டு மகிழ்வார்கள். படைத்த இந்த கும்ப சோறு மிகவும் ருசியாக இருக்கும். மாவிளக்கு செய்து அம்மனுக்கு ஏற்றி வழிபாடு செய்வார்கள்.


மறுநாள் புதன்கிழமை கலசத்தில் உள்ளது நீரை மாரியம்மன் கோவில்களில் உள்ள கம்பத்தில் ஊற்றி "உருளு தண்டம் "வைத்து வழிபாடு செய்வார்கள். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தங்களுடைய உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து கோவிலுக்கு சென்று வழிபடுவது ஊரே கோலகாலமாக காணப்படும். இதனைத் தொடர்ந்து மறுநாள் வானவேடிக்கை  முழங்க வண்டி வேடிக்கை சேலத்தில் குகை, செவ்வாய்பேட்டை அம்மாபேட்டை போன்ற இடங்களில் பிரசித்தியாக நடைபெறும். இதனைத் தொடர்ந்து விழாவின் நிறைவாக சத்தாபரணம் நடைபெறும் சேலத்தில் நடக்கும் மாரியம்மன் திருவிழாவை காண பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் தங்கள் உறவினர்கள் வீட்டிற்கு வருகை தந்து அனைவரும் சேர்ந்து சிறப்பாக கொண்டாடி மகிழ்வர்.


சேலம் கோட்டை மாரியம்மன் அருளால் அனைவரும் நல்வாழ்வு வாழ்வோமாக! மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்