18 மணி நேரம் மேக்கப் போட்ட வில்லன்.. மிரட்ட வரும் சமாரா!

Oct 10, 2023,02:37 PM IST

சென்னை: அக்டோபர் 13ம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் சமாரா வெளியிடப்படுகிறது.


பீக்காக் ஆர்ட் ஹவுஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எம்.கே.சுபாகரன்,அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் சமரா. இப்படத்தில் ரகுமான், பரத்,விவேக் பிரசன்னா,கேனஸ் மேத்திவ் ஜார்ஜ்,சோனாலி சூடன், டினிஜ் வில்யா ஆகியோர் நடித்துள்ளனர்.




பாலிவுட் நடிகர் மீர்சர்வார் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். தீபக்வாரியர் பாடல்களுக்கு இசை அமைக்கிறார், கோபி சுந்தர் பின்னணி இசை அமைக்கிறார்.  மலையாளம், தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகியுள்ளது. 


துருவங்கள் பதினாறு  படத்திற்கு பிறகு  வித்தியாசமான  கதையம்சம்  கண்ட  படங்கள்  கதாபாத்திரங்களில்  நடித்து வந்த ரகுமான் இப்போது  சமாரா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பினோஜ் வில்லியா நடித்துள்ளார். இவர் பெண்டுலம் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். 




இந்த படத்தில் பினோஜ் ஆலன் மோசஸ் என்ற கதாபாத்திரத்திற்காக 18 மணி நேர மேக்கப்  செய்துள்ளார். ஏன்னெனில், வெடிகுண்டில் உயிர் பிழைத்தவரின் கொடூரமான பாத்திரத்தை சித்தரிப்பதற்காக இந்த மேக்கப் செய்யப்பட்டுள்ளது.தற்போது சமரா தமிழில் வெளியாக இருப்பதால் மிகுந்த எதிர்பார்பில் இருக்கிறார் பினோஜ்.




படத்தை சார்லஸ் ஜோசப் இயக்குகிறார். படம் குறி்த்து அவர் கூறுகையில், பேமிலி மற்றும் அறிவியல் கலந்த பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை அனைவராலும் பாராட்டப்படும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?

news

தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்

news

டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு

news

சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்

news

திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!

news

கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!

news

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்

news

70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?

news

நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்