தன் பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

Oct 17, 2023,12:30 PM IST
டில்லி : தன் பாலின திருமணங்களை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க வேண்டும் என கேட்டு தொடரப்பட்ட வழக்கில் அனுமதி அளிக்க முடியாது என் சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஒரே பாலினத்தை சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்வதை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக அங்கீகாரம் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் ஓரின சேர்க்கையாளர்கள் பலர் மனுத்தாக்கல் செய்தனர். மொத்தம் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கு மே 11 ம் தேதி சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி சந்திரசூத் தலையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்கள் மீது தொடர்ந்து 10 நாட்கள் விசாரணை நடந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு 4 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றப்பட்டது.





சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சவீந்திர பட், ஹிமா கோஹ்லி, பி.எஸ்.நரசிம்மா ஆகிய நான்கு நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இதில் நான்கு நீதிபதிகளும் நான்கு விதமாக தீர்ப்புகள் வழங்கி உள்ளனர். அதில், தன்பாலின திருமணம் என்பது  கிராமப்புற வழக்கமோ அல்லது உயர் சமூகத்தினருக்கு தடை செய்யப்பட்டதோ கிடையாது. சிறப்பு திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது பற்றி பாலிமென்ட் தான் முடிவு செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூத் தெரிவித்துள்ளார். சிறப்பு திருமண சட்டத்தை ரத்து செய்தால் நாடு சுதந்திரத்திற்கு முன் இருந்த நிலைக்கு சென்று விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒருவர் தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்வது அவரின் உரிமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதியின் கருத்தை தான் முழு மனதுடன் ஏற்பதாக நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறிய நிலையில் இதை ஏற்க முடியாது என ரவீந்திர பட் தெரிவித்தார். இதனால் இது குறித்து முடிவு செய்ய மேலும் அவகாசம் தேவை என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. அதே சமயம் தன்பாலின ஜோடிகள் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள முடியும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.  5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இடம்பெற்றுள்ள 3 நீதிபதிகள் தன் பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளனர். இருவர் மட்டுமே, தங்களின் துணையை தேர்வு செய்யும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு என கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்த இந்த வழக்கில் ஓரின சேர்க்கையாளர்கள் அடுத்த கட்டமாக மேல்முறையீடு செய்வதற்கும் வாய்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை அவர்களின் கோரிக்கையை ஏற்று அங்கீகாரம் வழங்கும் பொறுப்பு பார்லிமென்ட் வசம் செல்லவும் வாய்ப்புள்ளது

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்