சென்னை: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 32 ரன்களை அள்ளி எடுத்து அவுட்டானார்.
ஐபிஎல் 2026 தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், அதிரடியாக ஆடிய சர்பராஸ் கான் விக்கெட்டை விஜய் குமார் வைஷாக் கைப்பற்றினார்.
முன்னதாக, இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய சர்பராஸ் கான், வந்த வேகத்தில் பஞ்சாப் பந்துவீச்சை சிதறடித்தார். வெறும் 12 பந்துகளில் 32 ரன்கள் (6 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) குவித்து சென்னை அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். குறிப்பாக விஜய் குமார் வைஷாக் வீசிய 17-வது ஓவரில் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகளை விளாசி அசத்தினார்.

ஆனால் அதே ஓவரின் நான்காவது பந்தில் (16.4 ஓவர்), வைஷாக் வீசிய 'குட் லென்த்' பந்தை சர்பராஸ் தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் பந்து சரியாக பேட்டில் படாமல் காற்றில் எழும்பியது. மிட்-ஆன் திசையில் நின்றிருந்த நேஹால் வதேரா பின்னோக்கிச் சென்று சிறப்பான ஒரு கேட்ச்சை பிடித்தார்.
இதன் மூலம் சர்பராஸ் கானின் அதிரடி இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்த விக்கெட்டுடன் விஜய் குமார் வைஷாக் தனது 4 ஓவர்களில் 38 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை (ஆயுஷ் மத்ரே மற்றும் சர்பராஸ் கான்) கைப்பற்றினார். ஆனால் சென்னை அணி 190 ரன்களைத் தாண்டி ரசிகர்களை ஹேப்பியாக்கி விட்டது.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}