- சசிகலா விஸ்வநாதன்
நினையாத நாளில்
அறியாத நாழிகையில்
புரியாத மொழியில்
கூறிவிட்டாய் நீ;
திடுக்கிட்டு, நான்
திகைப்பை விலக்கி
நாணம் கொண்ட நான்.
நாணம் கொண்ட
என் கண்ணை,
நேர் கொண்டு நீ பார்த்து;
என்ன தேடினாய்?
தேடிய பொருள்
கிடைத்ததா; உனக்கு என்னிடம்?

என் கண்ணில் கண்டதை
நீ விண்டுரைப்பாய் என நானும்;
நான்
விளம்பிடுவேனன
நீயும்;
நீண்ட பொழுது
காத்திருந்தோம்; பொழுதுதான் போனது.
போன பொழுதை பொத்தி வைத்தேன்.
நினைவில், இன்பமாய், இன்று வரை;
திளைக்கிறேன்; இன்னும் புரியவில்லை;
என் கண்ணில் என்ன பார்த்தாய்?
உன் கண் சிரித்ததை, நான்
புரிந்து கொண்டேன்.
புரிந்து கொண்டாய்;
நீயும், என் மனதின் மலர்வை,
இதுதான் காதல் என்பதோ?
இன்றுவரை உன்
கண் பார்த்து
நானும்;
என் கண் பார்த்து
நீயும்;
காணும் பிழை இன்றி
கருத்துப் பிழையும் இன்றி,
சேர்ந்து வாழ்தலின் சுவை அறிந்து;
அவரவர் போக்கின் புரிதலை காத்து;
மதித்து நடக்கும் கலை தெளிந்து;
நம் தேறல் நன்றே
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}