Tamil Thulippakkal : சசிகலா விஸ்வநாதனின்.. தித்திக்கும் துளிப்பாக்கள்!

May 22, 2026,11:22 AM IST

- சசிகலா விஸ்வநாதன்


நீண்ட கவிதைகள், மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், உரைநடைக் கவிதைகள் வரிசையில் துளிப்பாக்களும் மிகவும் பிரபலமாக உள்ளன. துளிப்பாக்கள் என்பது வேறு ஒன்றுமில்லை, ஹைக்கூ கவிதைகள்தான்.


எழுத்தாளர், கவிஞர் சசிகலா விஸ்வநாதனின் துளிப்பாக்கள்.. உங்களுக்காக இலக்கிய சுவையுடன்...!


(1)

வானம் கிழிந்து

ஒளி வெள்ளம்

பெரும் மழை


(2)

வறியோர் குரல்

முதியோர் கூற்று

செவிடன் காதில் சங்கு




(3)

ஒன்று சுருங்க

ஒன்று விரிய

நிஜமும் நிழலும்


(4)

உயரம் அறியாது 

ஏறியும் இறங்கியும் 

ஏழையின் வாழ்வு


(5)

கோடையின் தகிப்பு 

ஒளியின் சிதறல்

கானல் நீர்


(6)

சூடான தேநீர்

புன்னகையில் மருமகள்

அப்பம் மேல் நெய்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்