"ஒரு திருமுருகன் வந்து ஆங்கு.. உதித்தனன் உலகம் உய்ய".. தொடங்கியது சஷ்டி விரதம்!

Nov 13, 2023,03:32 PM IST
திருச்செந்தூர்: முருகனுக்குரிய விரதங்களுள் மிக முக்கியமானது கந்த சஷ்டி விரதம். ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை.பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு நாட்களும் நோன்பிருந்து கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்க வேண்டும்.  அந்த சஷ்டி விரதம் இன்று தொடங்கியுள்ளது.

விரதம் இருந்து முருகனை வணங்கினால் தீராத நோய்கள் தீரும். திருமண பாக்கியம் கை கூடி வரும் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை உண்டு விரதம் இருத்தல் வேண்டும். மதியம் மட்டும் உணவு உண்டு. காலை மாலை ஆகிய 2 வேளையும் பால் பழம் மட்டும் உண்ண வேண்டும்.

முருகனின் முகம் ஆறு ஆகும். சஷ்டி விரதமும் ஆறு நாள். ஆறு நாட்களும் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. இந்த ஆறு நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. முருகனின் ஆறு படை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர்.  சஷ்டி விரதத்தின் ஆறாவது நாள் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர். மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர் நிலைகளிலோ நீராடவேண்டியது அவசியம்.



முருகனின் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்கியம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நல்லது. வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் கைகூடி வரும்.  சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.

"அருவமும் உருவமாகி
அநாதியாய் பலவாய், ஒன்றாய்ப்
பிரம்மமாய் நின்ற ஜோதிப்
பிழம்பதோர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திருமுருகன் வந்து ஆங்கு
உதித்தனன் உலகம் உய்ய!"

இது கந்தபுராணம்..  இந்தப் பாடலை உள்ளன்புடன் சொன்னால் குழந்தைப் பேறு பெறலாம். எனவே குழந்தை பாக்கியம் கிடைக்க பெறாதவர்களுக்கு  இது மிகவும் சிறந்த விரதமாகும். சஷ்டி விரதம் இருப்போம்.. முருகனின் திருவருளுடன், நலம் பல பெறுவோம்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்