ரியாத்: சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பிறை தெரிந்ததைத் தொடர்ந்து ஈத் உல் பிதர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படவுள்ளது.
வழக்கமாக சவூதி அரேபியாவுக்கு அடுத்த நாள்தான் இந்தியாவில் ரம்ஜான் கொண்டாடப்படும். அந்த வகையில் இன்று சவூதியில் கொண்டாடப்படுவதால் இந்தியாவிலும் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும். வளைகுடா நாடுகளில் இன்று கோலாகலமாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

புனிதமான ரமதான் மாத முடிவைத்தான் ரம்ஜான் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். 30 நாள் நோன்புக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் ரமதான் மாதம் மார்ச் 2ம் தேதி தொடங்கியது. அதேசமயம், சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் மார்ச் 1ம் தேதி நோன்பு தொடங்கியது.
இந்திாயவில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவிலும் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் என்று அந்த நாட்டு இமாம்கள் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!
சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி
முதல்வர் விஜய் சொன்ன 'பார்ட்டி ஃபண்ட்'...திமுக கொந்தளித்து வெளிநடப்பு செய்தது ஏன்?
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. செப்டம்பர் 15ல் தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு
மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை ஜூன் 25-ல் வெளியீடு: அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
திருவள்ளூர் அமோனியா கசிவு விவகாரம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
அலைபேசி பேச்சு
அது ஒரு அழகிய மழைக்காலம்
{{comments.comment}}