நளினிக்கு பாஸ்போர்ட்.. 4 வாரத்தில் முடிவெடுக்க.. உச்சநீதிமன்றம் உத்தரவுஉத்தரவு

Aug 24, 2023,05:06 PM IST
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினிக்கு பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பாக நான்கு வாரத்தில்  முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று விடுதலையானவர் நளினி. இவரது மகள் லண்டனில் வசித்து வருகிறார். அவரைப் பார்க்கப் போவதற்காக பாஸ்போர்ட் கோரியிருந்தார் நளினி. ஆனால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை.



இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார். அதில், லண்டனில் வசிக்கும் எனது மகளை பார்க்க விரும்புவதால் அதற்காக எனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும். இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதம் விண்ணப்பித்து இருந்தேன். எனினும் முறையாக விண்ணப்பம் செய்தும் இது வரை பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை. 

காவல்துறையினர் வழக்கமான ஆய்வை நடத்தி தங்களது அறிக்கையை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இன்னும் பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை. எனவே பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இ்நத விவகாரம் தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் முடிவெடுக்குமாறு பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உத்தரவிட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், அவரது மனைவி நளினி உட்பட ஏழு பேர் ஆயுள் தண்டனை பெற்று சிறையில்  தண்டனையை அனுபவித்து வந்தனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் கழித்த நிலையில், பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, கடந்த 2022 நவம்பர் மாதம் விடுதலையானார்கள் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்

news

திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்

news

விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!

news

திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை

news

2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!

news

திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு

news

தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

news

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்