நளினிக்கு பாஸ்போர்ட்.. 4 வாரத்தில் முடிவெடுக்க.. உச்சநீதிமன்றம் உத்தரவுஉத்தரவு

Aug 24, 2023,05:06 PM IST
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினிக்கு பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பாக நான்கு வாரத்தில்  முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று விடுதலையானவர் நளினி. இவரது மகள் லண்டனில் வசித்து வருகிறார். அவரைப் பார்க்கப் போவதற்காக பாஸ்போர்ட் கோரியிருந்தார் நளினி. ஆனால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை.



இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்தார். அதில், லண்டனில் வசிக்கும் எனது மகளை பார்க்க விரும்புவதால் அதற்காக எனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும். இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதம் விண்ணப்பித்து இருந்தேன். எனினும் முறையாக விண்ணப்பம் செய்தும் இது வரை பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை. 

காவல்துறையினர் வழக்கமான ஆய்வை நடத்தி தங்களது அறிக்கையை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இன்னும் பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை. எனவே பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இ்நத விவகாரம் தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் முடிவெடுக்குமாறு பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உத்தரவிட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், அவரது மனைவி நளினி உட்பட ஏழு பேர் ஆயுள் தண்டனை பெற்று சிறையில்  தண்டனையை அனுபவித்து வந்தனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் கழித்த நிலையில், பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, கடந்த 2022 நவம்பர் மாதம் விடுதலையானார்கள் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்