என்னா வெயிலு.. என்னா வெயிலு.. மண்டையைப் பொளக்குதே.. அனலில் சிக்கிய சென்னை!

May 15, 2023,12:47 PM IST
சென்னை: சென்னையில் இன்று கடுமையான வெயில் அடித்து மக்களை மிரள வைத்து விட்டது. அனல் காற்றின் காரணமாக பகல் நேரத்தில் வெளியில் வரும் நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகி விட்டார்கள்.

தமிழ்நாட்டில் கோடை காலம் தனது வேலையைக் காட்டத் தொடங்கி விட்டது. கடும் வெயில் தற்போது அடித்து வருகிறது. அக்னி நட்சத்திரக் காலம் தொடங்கியபோது வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக  சற்று வெப்பம் குறைந்து மழையும் வந்து சற்று வெப்பத்தைக் குறைத்தது. ஆனால் இப்போது எல்லா ஈரப் பதமும் போய் வெயில் வெளுக்கத் தொடங்கி விட்டது.



பகல் முழுக்க கடும் வெயில் அடிக்கிறது. இரவில் புழுக்கம் நீண்ட நேரம் நீடிப்பதால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். இன்று காலை முதலே வெயில் வெளுத்தெடுத்து வருகிறது. பிற்பகல் 12 மணியளவில் சென்னையில் 104 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகியிலிருந்தது வெயில். வெயில் கடுமையாக அடித்ததால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள்.

வெளியில் வரவே மக்கள் தயங்கும் அளவுக்கு இன்று வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்றும் இதே அளவில்தான் சென்னையில் வெயில் பதிவாகியிருந்தது. இன்று இன்னும் கூட வெயில் அதிகமாக பதிவாகும் வாய்ப்புகள் உள்ளன.  வெயில் அதிகமாக இருப்பதால் முக்கியச் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வழக்கத்தை விட குறைந்து காணப்பட்டது.

வெயிலும், அனலும் அதிகமாக இருப்பதால் வெளியில் செல்வோர் மிகுந்த தற்காப்புடன் இருப்பது நல்லது. அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். முடிந்தால் தினசரி இளநீர் அருந்துங்கள். பழங்கள் நிறைய சாப்பிடுங்கள். மோர் குடிக்கலாம்.. உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்