கேரளா, கர்நாடகா உள்ளிட்ட..13 மாநிலங்களில்.. நாளை 2ம் கட்ட தேர்தல் விரல்களுடன் காத்திருக்கும் மக்கள்!

Apr 25, 2024,05:57 PM IST

டெல்லி: 2வது லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகள் நேற்று நிறைவடைந்த நிலையில், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட13 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறும் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உட்பட மொத்தம் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு சிறப்பாக நடந்தது. மக்கள், பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களின் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர். தமிழ்நாட்டில் மொத்தம் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவாகின.




இதனைத் தொடர்ந்து அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், திரிபுரா, மணிப்பூர்,ஜம்மு- காஷ்மீர் ஆகிய 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான  பிரச்சாரப் பணிகள் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.


இதில் கேரளாவில் உள்ள 20 தொகுதிக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வயநாடு தொகுதியில் கடந்த முறை போலவே இந்த முறையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனி ராஜா மற்றும் பாஜக மாநில தலைவர் கே சுரேந்திரன் ஆகியோர் போட்டியிட களமிறங்கியுள்ளனர்.


கர்நாடகாவில் மொத்தம் 14 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதில் பாஜக, குமாரசாமி தலைமையிலான ஜனதா தளம் (எஸ்)கூட்டணியில் இணைந்து, காங்கிரஸை எதிர்த்துக் களம் காண்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!

news

தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

news

டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!

news

இந்திய மாணவருக்கு கைவிலங்கிட்டு.. தரையில் கிடத்தி.. அமெரிக்க விமான நிலையத்தில் அராஜகம்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்

news

ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?

news

IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்