கேரளா, கர்நாடகா உள்ளிட்ட..13 மாநிலங்களில்.. நாளை 2ம் கட்ட தேர்தல் விரல்களுடன் காத்திருக்கும் மக்கள்!

Apr 25, 2024,05:57 PM IST

டெல்லி: 2வது லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகள் நேற்று நிறைவடைந்த நிலையில், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட13 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறும் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உட்பட மொத்தம் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு சிறப்பாக நடந்தது. மக்கள், பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களின் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினர். தமிழ்நாட்டில் மொத்தம் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவாகின.




இதனைத் தொடர்ந்து அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், திரிபுரா, மணிப்பூர்,ஜம்மு- காஷ்மீர் ஆகிய 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான  பிரச்சாரப் பணிகள் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.


இதில் கேரளாவில் உள்ள 20 தொகுதிக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வயநாடு தொகுதியில் கடந்த முறை போலவே இந்த முறையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனி ராஜா மற்றும் பாஜக மாநில தலைவர் கே சுரேந்திரன் ஆகியோர் போட்டியிட களமிறங்கியுள்ளனர்.


கர்நாடகாவில் மொத்தம் 14 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதில் பாஜக, குமாரசாமி தலைமையிலான ஜனதா தளம் (எஸ்)கூட்டணியில் இணைந்து, காங்கிரஸை எதிர்த்துக் களம் காண்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்