சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம்.... தமிழக அரசு உத்தரவு!

May 26, 2025,06:28 PM IST

சென்னை: சென்னை  மாநகராட்சிக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழகத்தில் பருவமழை காலங்களில் அதிக மழையினால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பாதிப்புகள் அதிகளவில் ஏற்படுகின்றன. இந்த பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிகக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பேரிடர் காலங்களில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து பேரிடர்களை எதிர்கொள்ள புதிய ஏற்பாட்டினை தமிழ்நாடு அரசு செய்துள்ளது.


சென்னை மாநகருக்கு என தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் அடங்கிய ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.




தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் மாநகராட்சி துணை ஆணையர், மாநகராட்சி நல அலுவலர், சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரி, தலைமைப் பொறியாளர் உள்ளிட்டோர் ஆணையத்தில் இடம்பெற்றுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்