சென்னை: சென்னை மாநகராட்சிக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை காலங்களில் அதிக மழையினால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பாதிப்புகள் அதிகளவில் ஏற்படுகின்றன. இந்த பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிகக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பேரிடர் காலங்களில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து பேரிடர்களை எதிர்கொள்ள புதிய ஏற்பாட்டினை தமிழ்நாடு அரசு செய்துள்ளது.
சென்னை மாநகருக்கு என தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் அடங்கிய ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.

தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் மாநகராட்சி துணை ஆணையர், மாநகராட்சி நல அலுவலர், சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரி, தலைமைப் பொறியாளர் உள்ளிட்டோர் ஆணையத்தில் இடம்பெற்றுள்ளனர்.
Tamil Nadu Assembly Elections 2026: பெண் வேட்பாளர்களே இல்லாத தமிழகத்தின் 46 தொகுதிகள்!
அமைச்சர் சேகர்பாபுவின் மகன்களுக்குச் சொந்தமான நிறுவனத்தில் ஐடி ரெய்டு
இமாலய வெற்றியை நோக்கி...தமிழக தேர்தல் களம் குறித்து அண்ணாமலை அதிரடி கணிப்பு
அவசரச் சிகிச்சை... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதி
சிந்திப்போம்.. மனிதன் ஏன் இன்னொரு மனிதனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வேண்டும்?
சித்திரை பிறக்கப் போகுது.. அட்சய திரிதியையும் வந்தாச்சு.. தங்கம் மட்டும்தான் வாங்கணுமா
சத்தமில்லாச் சத்தங்கள்
Deepa Ravi Poem: கவிதையென்பது!
Be like a bee
{{comments.comment}}