டெல்லி: பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி, வெள்ளிக்கிழமை அன்று டிரினிடாட்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஒரு வரலாற்று சாதனையைப் படைத்தார்.
இந்தப் போட்டியில், முதலில் பந்துவீசத் தீர்மானித்த பாகிஸ்தான், எவின் லூயிஸ், ரோஸ்டன் சேஸ் மற்றும் கேப்டன் ஷாய் ஹோப் ஆகியோர் அரை சதங்கள் அடித்த போதிலும், மேற்கிந்திய தீவுகள் அணியை 280 ரன்களுக்கு சுருட்டியது. பின்னர் ஆடிய பாகிஸ்தான், 48.5 ஓவர்களில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி வாகை சூடியது.
வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார். இந்த நான்கு விக்கெட் சாதனையுடன், ஷஹீன் தனது 65வது ஒருநாள் போட்டியில் 131 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
ஷஹீன் இப்போது 65 ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன், 65 ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்களில் இரண்டாவது இடத்தில் இருந்தவர் ரஷித் கான் (128 விக்கெட்டுகள்). அவரைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார் ஷஹீன்.
முன்னதாக முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 280 ரன்கள் எடுத்தது. இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் 284-5 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. கேப்டன் முகமது ரிஸ்வான் 53 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் நவாஸ் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் ஒரு சிக்ஸர் மற்றும் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி அடக்கம். ஆட்டநாயகனாகவும் நவாஸ் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி ஞாயிற்றுக்கிழமையும், மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி செவ்வாய்க்கிழமையும் பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற உள்ளது.
நான் பிடிவாதக்காரன் கிடையாது...பதவி மீது ஆசை எதுவும் இல்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
மோடியால் முடியாததை நான் சாதித்ததால் எடப்பாடி பழனிச்சாமிக்கு வயிற்றெரிச்சல்: முதல்வர் முக ஸ்டாலின்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி.. ஒரு புகாரும் வரவில்லை.. தேர்தல் ஆணையம்
தமிழ் வளர்ச்சியில் பெண் கவிஞர்களின் பங்கு!
ஹலோ மக்களே.. தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?.. இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க!
திருவண்ணாமலைக்கு திடீரென போன லோகேஷ் கனகராஜ்.. கூலி வெற்றிக்காக பிரார்த்தனை!
32வது பிறந்த நாளை கொண்டாடும் ஹன்சிகா மோத்வானி.. போராட்டங்களே வாழ்க்கை!
புதிய வருமான வரி மசோதா 2025.. திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது
டிரம்ப் போட்ட 50% வரியால் பாதிப்பு.. இந்திய ஜவுளி ஏற்றுமதித் துறைக்கு ரூ 87,000 கோடி இழப்பு!
{{comments.comment}}